Thursday 15 September 2011

புவிவெப்பமயமாதல் ஓர் அமானுஷ்யம்!






வரலாற்றை புரட்டிப் பார்க்கும்போது, தற்போது நடந்துகொண்டிருப்பது பிரமிப்பாக இருக்கும். நாம் எதுவெல்லாம் நடந்திருக்காது. இருந்திருக்காது என்று நினைக்கிறோமோ அதெல்லாம் அப்போது நடந்திருக்கிறது என்பதே பிரமிப்பான விஷயம்தான்.
அப்படி ஒரு விஷயத்தைத்தான் நீங்கள் இப்போது படிக்கப் போகிறீர்கள். சமூக ஆர்வலர்கள் ஆரம்பித்து எல்லோர் வாயும் முணுமுணுக்கும் வார்த்தை சுற்றுப்புற சீர்கேடு. அதிலும் குறிப்பாக குளோபல் வார்மிங் என்ற வார்த்தையை சொல்லாதவர்களே இருக்க முடியாது என்றுதான் சொல்ல வேண்டும். குளோபல் வார்மிங் என்றால், பூமி கட்டுங்கடாங்காத வெப்பம் சூழ்ந்திருக்கிறது என்று சொல்லலாம். சுருக்கமாக புவி வெப்பமயமாதல். குளோபல் வார்மிங் பிரச்சினையால் பச்சை வீட்டு வாயு அதிகளவில் வெளியேறுவதால் ஓசோன் படலம் ஓட்டை விழுந்து புற ஊதாக் கதிர்களும், அகச்சிவப்பு கதிர்களும் நேரடியாக பூமியைத் தாக்கும். இதனால், மனிதர்களுக்கு தோல் புற்றுநோய்கள் ஆரம்பித்து, வித்தியாசமான உயிர்க்கொள்ளி நோய்கள் எல்லாம் ஏற்படும் என்பது விஞ்ஞானிகளின் எச்சரிக்கைகள்.
புவி வெப்பமயமாதல் எப்படி ஏற்படுகிறது? இந்தக் கேள்விக்கு கண்டிப்பாக உங்களுக்கும் பதில் தெரியும். இருந்தாலும் கூடுதலா தெரிஞ்சு வச்சிக்கோங்க. வீடு, அலுவலகங்கள், கார், பஸ்களில் பயன்படுத்துகிற ஏ.சி., பிரிட்ஜ் சாதனங்களில் இருந்து வெளிவரும் குளோரோ புளுரோ கார்பன் என்னும் வாய்வுதான் இந்த புவி வெப்பமயமாதலுக்கு முக்கியக் காரணம்னு சொல்றாங்க. பூமியைப் பாதுகாக்கும் படலத்துடன், இந்த வாயு வினைபுரிந்து அதை ஓட்டை விழச் செய்கிறது. அதனால், கட்டுக்கடங்காத வெப்பம் பூமியைத் தாக்குகிறது. இந்த வெப்பத்தின் அளவு எதிர்காலத்தில் இன்னும் அதிகரிக்கும். அப்படி அதிகரித்தால், துருவத்தில் உள்ள ஐஸ் மலைகள் உருகும். கடல் நீர்மட்டம் உயரும். இதனால், பல்வேறு கண்டங்கள் அழிந்து போகும். கடந்த சில ஆண்டுகளுக்கு முன் உருவான சுனாமி கூட புவி வெப்பமயமாதலால்தான் என்று எச்சரிக்கிறார்கள் விஞ்ஞானிகள்.
உலக நாடுகள் , மக்கள்தொகை பெருக்கத்திற்கு ஏற்றவாறு மின்சாரத்தை வழங்குவதற்காக, அணு உலைகளை அமைத்து வருகிறது. இதிலிருந்து வெளியேறும் கார்பன் துகள்கள், பெட்ரோல் பயன்படுத்தும் வாகனங்கள், எந்திரங்களில் இருந்து வெளியேறும் கார்பன் துகள்களால்தான் புவிவெப்பமயமாதல் ஏற்படுவதற்கு முக்கியக் காரணங்கள் என்றும் ஆராய்ச்சியாளர்கள் சொல்கிறார்கள். இன்று நாம் சொல்லிக் கொண்டிருக்கும் இந்த புவி வெப்பமயமாதல் வாகனப் பெருக்கம், அணு உலைகள் பெருக்கம், குளிர்சாதன வசதிகளின் பயன்பாட்டினால்தான் என்று நாம் நினைத்துக்கொண்டிருக்க, அதெல்லாம் சுத்தமாய் பொய் என்று சொல்லும் அளவிற்கு ஒரு வரலாற்றுச் சம்பவம் இருக்கிறது.
1799 ஆம் ஆண்டு தாமஸ் ஜெபர்சன் என்பவர் அமெரிக்க செனட்டில், புவி வெப்பமயமாதல் குறித்த பிரச்சினையை கிளப்புகிறார். பூமியில் கட்டுக்கடாங்காத கார்பன் வாயுக்களால் பூமிப் பந்து வெப்பத்தால் கட்டுண்டு கிடக்கிறது. இதனால், துருவங்களில் இருக்கும் பனிச் சிகரங்கள் உருகி அமெரிக்காவிற்கு ஆபத்து நேர்ந்துவிடும். எனவே இந்தப் பிரச்சினையை அரசு உடனடியாக கவனத்தில்கொண்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார். அப்போது அமெரிக்க அதிபராய் பதவி வகித்தது, ஜான் ஆடம்ஸ். தாமஸ் ஜெபர்சன், 1779 முதல் 1781 ஆம் ஆண்டு வரை அமெரிக்காவின் வெர்ஜீனியா மாகாணத்தின் கவர்னராக இருந்தது குறிப்பிடத்தக்கது. அதுமட்டுமல்ல, அமெரிக்காவின் மூன்றாவது அதிபரும் அவர்தான். இவ்வளவு முக்கிய நபரான தாமஸ் ஜெபர்சன் வெளியிட்ட இந்த செய்திக் குறிப்பு கண்டிப்பாக பொய்யாக இருக்க வாய்ப்பில்லை.
ஆனால், பூமி வெப்பமயமாதலுக்கு காரணம் என்று நாம் இன்றுவரை சொல்லிக்கொண்டு இருக்கிறோமே... அணு உலைகள், குளிர்சாதனங்கள், மற்றும் பெட்ரோல், டீசலால் பயன்படுத்தும் வாகனங்கள் மற்றும் எந்திரங்கள். அவைகள் எல்லாம் 1799ஆம் ஆண்டு தாமஸ் ஜெபர்சன் அறிக்கை வெளியிடும்போது பயன்பாட்டிலேயே கிடையாது என்பது ஆச்சர்யமான விஷயம்.
ஆம்.. உண்மைதான். மின்சாரத்திற்காக மட்டும் நாட்டின் வளர்ச்சிக்காக மட்டும் உருவாக்கப்பட்ட அணு உலைகள், உலகில் முதன்முதலில் உருவாக்கப்பட்டது 1954ஆம் ஆண்டுதான். அதேபோல குளோரோ புளோரோ கார்பனை வெளியேற்றும் குளிர்சாதனப் பெட்டிகள் என்று சொல்வதைவிட குளிர்சாதனப் பெட்டி குறித்த யோசனையை முதன்முதலில் 1758ஆம் ஆண்டு பெஞ்சமின் பிராங்க்ளின்தான் வெளியிட்டார். அவர் அப்போது அமெரிக்காவின் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தின் வேதியியல் துறை பேராசிரியராக இருந்தார். அவரும் குளிர்சாதனப் பெட்டிக்கான கொள்கைகளை வகுத்துக் கொடுத்தாரே தவிர முழுமையாக வடிவமைக்கும் பணியில் அவர் ஈடுபடவே இல்லை.
ஆனால் அதற்குப் பிறகு 1820ஆம் ஆண்டு பிரிட்டிஷ் ஆராய்ச்சியாளர் மைக்கேல் பாரடே என்னும் அறிவியல் விஞ்ஞானிதான் அம்மோனியாவை பயன்படுத்தி குளிர்விப்பானை உருவாக்கலாம் என்று யோசனையை சொன்னதுடன், அதன் வடிவமைப்புப் பணிகளிலும் முதன்முதலாக ஈடுபட்டார். இருப்பினும் குளிர்சாதனப் பெட்டி, மற்றும் குளிர்சாதனங்கள் மக்கள் பயன்பாட்டிற்கு வந்தது என்னவோ 1880ஆம் ஆண்டிற்குப் பிறகுதான் என்று வரலாறு சொல்கிறது. அதேபோல 1800ஆம் ஆண்டுகளுக்கு முன்பு வரை சர்வதேச அளவில் கார்கள், வாகனங்கள் எல்லாமுமே நீராவியில்தான் ஓடியிருக்கிறது. முதல் முறையாக எண்ணெயை பயன்படுத்தி நீராவியால் ஓடும் கார் 1815ஆம் ஆண்டுதான் பயன்பாட்டிற்கு வந்தது. பெட்ரோலை பயன்படுத்தி ஓடும் வாகனம் முதன்முதலில் வடிவமைக்கப்பட்டது 1838ஆம் ஆண்டுதான்.
மேற்சொன்ன கண்டுபிடிப்புகளும், அதன் காலங்களையும் வைத்துப் பார்க்கும்போது, 1790ஆம் ஆண்டுகள் என்பது பெட்ரோல், குளிர்சாதனப் பெட்டி, அணு உலைகள் எதுவுமே பயன்பாட்டிலேயே இல்லாத காலகட்டம். ஆனால், 1799ஆம் ஆண்டு புவி வெப்பமயமாதல் குறித்து மிகவும் பயங்கரமான ஒரு அறிக்கையை முன்னாள் அமெரிக்க அதிபர் தாமஸ் ஜெபர்சான் தாக்கல் செய்திருக்கிறார் என்றால், இப்போது புவிவெப்பமயமாதலுக்கு காரணமான விஷயங்களாக விஞ்ஞானிகள் சொல்லும் காரணிகள் பொய்யா? அல்லது 15ஆம் நூற்றாண்டுக்கு முந்தைய காலத்தில் அல்லது அதற்கும் முந்தைய மக்கள் பூமிப்பந்தை தாக்கும் அளவிற்கு வெப்பத்தை கிளர்ச்சியடைய செய்யும் அளவிற்கு மாறுபட்ட கருவிகளை பயன்படுத்தி இருந்தார்களா? றஎவைதான் உண்மை... அல்லது 1700ஆம் ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த மனிதர்கள் விஞ்ஞானத்தில் நம்மைவிட விஞ்சியவர்களா? விந்தையான பல கேள்விகள்.. நம்மை துளைத்துக்கொண்டிருக்கின்றன. ஆனால், இங்கு வைக்கப்பட்டிருக்கும் கேள்விகள் குறித்த ஆய்வுகள் சர்வதேச அளவில் தொடர்ந்து கொண்டுதான் இருக்கின்றன.