Tuesday 12 February 2013

அமானுஷ்யம்

ஒரே ஒரு அமானுஷ்யம்.பயந்த சுபாவம்
உள்ளவர்கள் படிக்க வேண்டாம்.

இடம்: நாகப்பட்டினத்து லாட்ஜ் . வருடம்: 1980.
அந்த லாட்ஜில் ஒரு வசதி உண்டு. ஒரு ரூ வாடகைக்கு
லாட்ஜ் வராந்தாவில் படுத்துக்கொள்ளலாம்.
ரெகுலர் வாடிக்கையாளராக இருந்தால் பாய் ,
தலையணையும் கொடுப்பார்கள். ஆனால்
விளக்கை அனைத்து விட்டுத்தான் படுக்கை
போடவேண்டும். வெளிச்சத்தில் தலகானியைப்

பார்த்து விட்டால் வயிற்றைக் குமட்டிக் கொண்டு
வரும்.இப்படியும் சில வாரங்கள் இருந்தேன்...

ஒரு நாள் இரவில் கேரளக் காரர் ஒருவர் `சார்
நீங்கள் என் அறையில் படுக்கலாம்` என்றார்.
ஓரளவுக்கு மறுத்துவிட்டு அப்புறம் உள்ளே
போய்விட்டேன்.அவர் கட்டிலில். நான் கீழே.
அவருடைய பழைய டிரங்குப் பெட்டி என் அருகே.
விளக்கு அணைக்கப்பட்டது.மனித நடமாட்டம்
இல்லை.கடல் ஓசை மட்டும் காதில் கேட்கிறது.

தூக்கம் வரவில்லை.அந்த அறையில் இரண்டு
பேர்தான் இருக்கிறோம்.ஆனால் வேறு யாரோ
மூச்சு விடுவது போல ஒரு உணர்வு. உணர்வுதான்.
சத்தம் இல்லை.கட்டிலில் இருப்பவர் கட்டையாய்
கிடக்கிறார். கிட்டே போய் பார்த்தேன். பெருமூச்சு
அவரிடம் இருந்து வெளிப்படவில்லை. பாம்பை
அந்தப் பெட்டியில் வைத்திருப்பாரோ என்ற
சந்தேகம். பாம்பு மூச்சு விட்டு நான் பார்த்ததில்லை.
தவிர மூச்சு பெட்டியில் இருந்து வரவில்லை.
மூச்சு கட்டிலின் கால் பக்கம் இருந்து வந்தது.

பயம் என்று சொல்லமுடியாது.அசௌகரியமான
சூழ்நிலை.சந்தேகம்.குழப்பம் என்று சொல்லலாம்.
எழுந்து வெளியே போவதும் கேவலமாக இருந்தது.
இரவு முழுதும் இப்படியே போனது. ..

காலையில் கோபாலன், அதான் கேரளாக்காரர்
கிணற்றடியில் பல் தேய்த்துக் கொண்டிருந்தார்.
ஏழெட்டு பேர் இருந்தார்கள்.எல்லோரும் நாம்
சொல்வதை செய்யக்கூடியவர்கள். `இவனைக்
கட்டுங்கடா` என்றேன். கேள்வியே இல்லை.
தூணில் கட்டி விட்டார்கள். `லுங்கியை அவுத்துடுங்க`
என்றேன். கோபாலன் கதறிவிட்டார `சார் என்னை
விட்டுடுங்க. நான் இங்க எந்த தப்பும் செய்யல` என்றார்
அவருடைய வாக்குமூலத்தை யாரும் பதிவு செய்யவில்லை.
லுங்கியைக் கிழித்து எடுத்துவிட்டார்கள்...

கோபாலனின் இடது தொடையில் பெரிய அளவில்
நான்கு தையல்கள். அதைப் பார்த்தவுடன் நம்ம
ஆட்கள் கொஞ்சம் பின்வாங்கினார்கள். அவருடைய
நிலைமையோ பரிதாபமாக இருந்தது. தண்ணீர் கொடுக்கச்
சொன்னேன். தண்ணீரைக் குடித்துவிட்டு அவரே
சொல்லிவிட்டார். ஏதோ ஒரு இட்சினியை இறக்கி
தகட்டில் வைத்து தொடையில் தைத்துக் கொண்டிருக்கிறார்.

`கேரளாவில் மாந்திரீகம் செய்வேன்,இங்கே வியாபாரம்
செய்யத்தான் வந்தேன்` என்று சத்தியம் செய்தார்.கண்ணீர்
விட்டார். `அவிழ்த்து விடுகிறேன்.ஊருக்குப் போய்விடு`
என்றேன். அன்றே புறப்பட்டுப் போய்விட்டார். போகும்போது
சொல்லிக்கொள்ள வந்தார்.`சார் நீங்கள் என்ன வித்தை படிச்சீங்க?`
என்று கேட்டார்.நம்பளையும் மந்திரவாதி ஆக்கிவிட்டாரே என்று
எனக்கு கடுப்பு.`எனக்கு எந்த வித்தையும் தெரியாது` என்றேன்.
`சார் கயிறெல்லாம் கட்டி இருக்கீங்க`என்று சொல்லி சிரித்துவிட்டு
அவர் போய்விட்டார்.

சென்னையில் இருந்து புறப்படும்போது யாரோ ஒரு தங்கச்சி
கட்டிய ரக்ஷா பந்தன் கயிறு அது என்பதை உங்களுக்குத்
தெரிவிக்கிறேன்.

காதுகளில் பேசும் அமானுஷ்யம் !

இந்த தகவலை ujiladevi.blogspot.com என்ற தளத்திலிருந்து எடுத்து இங்கு பதிந்தேன் 

ஐயா நான் சில வருடங்களுக்கு முன்பு மதுரைக்கு பக்கமுள்ள மேலூர் என்ற ஊரில் ஒரு ஜோதிடரை பார்க்க சென்றேன் அவரிடம் நான் எந்த கேள்வியும் கேட்க வில்லை ஆனால் நான் எதற்க்காக அவரை பார்க்க போனேன் என்னென்ன கேள்விகள் அவரிடம் கேட்க விரும்புகிறேன் என்பதை மிக துல்லியமாக நான் எதுவும் சொல்லாமலே அவர் முன்னால் உட்கார்ந்த மாத்திரத்திலேயே கடகடவென சொல்லிவிட்டார் எனக்கு மிகவும் ஆச்சரியமாக போய்விட்டது ஜோதிடத்தில் இப்படி கூட சொல்ல முடியுமா என்ற வியப்பு ஏற்பட்டது 

இந்த இடத்தில் நான் கேட்க விரும்புவது கேள்விகள் கேட்காமலே பதில் சொல்ல ஜோதிட அறிவு மட்டும் இருந்தால் போதுமா அல்லது அதற்க்கான மந்திர பயிற்சிகள் எதாவது உள்ளதா எச்சினிகளை வசியம் செய்து வைத்துக்கொண்டு இப்படி பட்ட வித்தைகளை சிலர் செய்கிறார்கள் என்று சொல்லப்படுகிறதே அதில் உண்மை இருக்கிறதா அது சாத்தியம் தானா? 

செல்லத்துரை,இராமேஸ்வரம் 

நானிருக்கும் அரகண்டநல்லூர் பக்கத்தில் கண்டாச்சிபுரம் என்ற ஒரு சிற்றூர் உள்ளது அங்கே பத்து பதினைந்து வருடத்துக்கு முன்பு ஒருவர் இருந்தார் அவரிடம் யார் சென்றாலும் வெறுங்கையில் சிறிய சிலைகள் சந்தனம் விபூதி குங்குமம் இனிப்பு வகைகள் போன்றவைகளை வரவழைத்து கொடுப்பார் 

அவர் கையில் எதுவும் இருக்காது நிமிட நேரத்தில் எங்கிருந்தோ மாயமாக வந்து அவர் உள்ளங்கையில் இந்த பொருட்கள் உட்கார்வதை நான் என் கண்களாலேயே பார்த்திருக்கிறேன் அக்கம் பக்கத்தில் உள்ள ஊர்களில் அவர் மிகவும் பிரபலமானவர் அவரின் அமானுஷ்ய சக்தியை பற்றி கேள்வி பட்டு நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்களே நேரில் வந்து அவரை பார்த்திருக்கிறார் அது மட்டும் அல்ல அவருக்காக அந்த ஊரில் சிவாஜி கணேசன் தன சொந்த செலவில் முருகன் கோவில் ஒன்றையும் கட்டிக்கொடுத்திருக்கிறார் 

இப்படி ஏராளமான வித்தைகாரர்கள் நம் நாட்டில் உண்டு அவர்கள் அனைவரும் மலையாள மாந்திரிகத்தில் கூறப்படும் எச்சினி வசியம் என்ற மந்திர கலையில் நல்ல தேர்ச்சியும் அனுபவமும் பெற்றவர்களே ஆவார்கள் அவர்களில் ஒன்றிரண்டு ஏமாற்று பேர்வழிகள் உண்டு என்பதை இந்த இடத்தில் கண்டிப்பாக சொல்ல வேண்டும் எது எப்படி இருந்தாலும் எச்சினி வசியம் பல அமானுஷ்ய வித்தைகளுக்கு மூலமாக இருக்கிறது என்பதை மறுப்பதற்கில்லை 

இந்த எச்சினி வசியத்தில் ஒன்று கர்ண எச்சினி வசியமாகும் இந்த கர்ண எச்சினி யாரிடம் வசியபட்டு இருக்கிறதோ அவருக்கு அது கேட்கும் தகவல்கள் எல்லாவற்றையும் கொடுத்துவிடும் உதாரணமாக அத்தகைய நபரிடம் நாம் சென்றவுடன் நம்மை பற்றிய எல்லா தகவல்களையும் அந்த எச்சினி அவர் காதில் சொல்லிவிடும் அதை அவர் நம்பிடம் சொல்லி நம்மை அதிசயப்பட வைப்பார் அந்த எச்சினி சொல்லும் கடந்த கால பலன்கள் அனைத்தும் துல்லியமாக இருப்பது போல் எதிர்கால பலன்களும் இருக்கும் என்று சொல்ல முடியாது 

எச்சினி வசியத்தின் மூலம் மனிதனுக்கு கிடைக்கும் இந்த சக்தியை ஜோதிட கணிதத்தின் மூலமும் பெறலாம் மகாகவி காளிதாசனை பற்றி கேள்வி படாதவர்கள் இருக்க முடியாது அவர் சாகுந்தலம் மேகதூதம் போன்ற புகழ்பெற்ற இலக்கிய நூல்களை மட்டும் எழுதவில்லை உத்தரகாலாம்மிருதம் என்ற ஜோதிட நூலையும் எழுதியுள்ளார் அதில் கேள்வி கேட்காமலே பதில்களை கணித்துக் கூறும் ஒரு பிரசன்ன சூத்திர வகையும் அவர் சொல்லியுள்ளார் அதாவது ஜோதிடம் பார்க்க்க வருபவர் வைக்கும் தட்சனையின் எண்ணிக்கையையும் அவர்களால் வைக்கப்படும் தாம்புலத்தின் வெற்றிலையின் எண்ணிக்கையும் கணகிட்டே அவர்கள் கேட்கும் கேள்வியையும் அதற்க்கான் பதிலையும் கணித்து கூறும் வழிவகையை மிக எளிமையாக சொல்லிவுள்ளார் 

பலர் என்னிடம் கேட்கும் ஜோதிட சம்பந்தமான கேள்விகளுக்கு பதில் சொல்லும் போது அதற்க்கான ஆதரத்தை ஜாதக அலங்காரம் என்ற நூலில் கூறப்பட்டுள்ளதை வைத்து சொல்வதை பலர் அறியலாம் அந்த ஜாதக அலங்கார நூலில் ஒரு குழந்தை வீட்டில் பிறக்கிறதா மருத்துவமனையில் பிறக்கிறதா வழியில் பிறக்கிறதா என்பதை கணித்து சொல்லும் வழிமுறைகள் சொல்லப்பட்டுள்ளன 

ஒருவன் ஜாதகத்தில் லக்ண நிலையை வைத்து அவன் எந்த திசை பார்த்த வாசல் உள்ள வீட்டில் பிறந்தான் என்பதையும் அவன் வீட்டுக்கு அருகில் எந்த தெய்வத்தின் கோவில் இருக்கிறது என்பதையும் சொல்லிவிடலாம் அதற்க்கான கணித முறையும் ஜாதக அலங்காரத்தில் இருக்கிறது என் அனுபவத்தை பொறுத்தவரை அவைகள் சரியாய் இருப்பத்காகவே சொல்ல தோன்றுகிறது 

இப்படி எத்தனையோ அதிசயமான வழிமுறைகளை நமது முன்னோர்கள் கண்டறிந்து வைத்துள்ளனர் அவைகளை நாம் தான் பயன்படுத்தாமல் வீணாக விட்டுவைத்து இருக்கிறோம்

இந்த தகவலை ujiladevi.blogspot.com என்ற தளத்திலிருந்து எடுத்து இங்கு பதிந்தேன்