Friday 13 February 2015

உள்ளுணர்வின் மூலம் கண்டுபிடிக்கப்பட்ட ராஜாவின் எலும்புக்கூடு..!

உள்ளுணர்வின் மூலம் கண்டுபிடிக்கப்பட்ட ராஜாவின் எலும்புக்கூடு..!
சமீபத்தில் ஒரு ஹிந்தி திரைப்படம் அமீர்கானின் “தலாஷ்” பார்த்தேன் இதில் ஒரு முக்கியமான கட்டம் பொலிஸ் அதிகாரியான அமீர் தன்னிடம் ஆவி பேசியது என்பதை பின்னால் ஒரு கட்டத்தில் உணர்கிறார். அந்த ஆவி கொலையை கண்டுபிடிப்பதற்காக உதவிகள் செய்கிறது ?!!. ( படத்தின் திருப்பு முனையே இதுதான்.) அவரின் உள்ளுணர்வு தூண்டுதலில் இறந்தவரின் உடல் புதைக்கப்பட்ட இடத்தை தன்னிலை மறந்து தோண்டுவார். எலும்புக்கூடு கிடைக்கிறது அதன் கை விரலில் ஒரு மோதிரம் இறந்தவளினுடையது என்பது ஒரு ஆதாரம் குறியீடாக காட்டப்படுகிறது…
இதே போல் அல்ல இதுமாதிரி உள்ளுணர்வினால் இறந்த ராஜாவின் எலும்பு கூடு கண்டுபிடிக்கப்பட்டது…நிஜத்தில் ஒரு சம்பவம் இங்கிலாந்தில் நடந்துள்ளது.
மிஸ் லேங்லே(Miss Langley) (Richard III Society )மூன்றாம் ரிச்சர்ட் சொசைட்டியில் ஒரு உறுப்பினர் அதோடு சேனல்-நான்கிற்காக ”மூன்றாம் ரிச்சர்ட்” பற்றிய ஒரு ஆவணப்படத்திற்காக சார்ட் தயாரித்து வந்தவர்.
இவர் தான் லிசெஸ்டர் கவுன்சில் கார் நிறுத்துமிடத்தில் (Leicester city council car park )ராஜாவின்(Richard III ) எலும்புக்கூட்டை கண்டுபிடித்தவர்.
சண்டே டைம்ஸ் க்கு அளித்த பேட்டியில் இப்படி சொல்கிறார்…
ஒரு மித வெப்பமான தினத்தில் (August 2009) லிசெஸ்டர் கவுன்சில் கார் நிறுத்துமிடத்தில் கடந்து செல்லும் போது எனக்குள் ஒரு உள்உணர்வு ஏற்பட்டது. என் மயிர் கால்கள் சிலிர்த்தன சில்லென்ற உணர்வு அந்த இடத்தை கடக்கும் போது எனக்கு ஏற்பட்டது. விவரிக்க முடியாத உணர்வு அது…அந்த இடத்தில் தான் போரில் இறந்த அரசர் ரிச்சர்டின் சமாதி இருப்பதாக உணர்ந்தேன்.
“நான் ஒரு அறிவார்ந்த மனித வர்க்கம் ஆனால் என் மூலமாக உண்மை உணர்த்தப்பட்டபோது எனக்கு விவரிக்க முடியாத உணர்வு ஏற்படுகிறது”
ரிச்சர்ட் III இங்கிலாந்தின் ”ஹவுஸ் ஆப் யார்கின்” கடைசி அரசர் வாழ்ந்த காலம் (1452 – 1485) .
”ரோஜாக்களின் போர் ”(யோர்க் மற்றும் லாண்செஸ்டர் வம்சங்களுக்கிடையேயான போர்) என வர்ணிக்கப்படும் சண்டையில் ஏழாம் ஹென்றியுடனான போரில் தலை கவசம் இழந்த மூன்றாம் ரிச்சர்ட் தலையில் பலத்த வெட்டு காயங்களும் மண்டை எலும்பு உடைந்த நிலையில் போஸ்வொர்த் களத்தில் மரணம் அடைந்தார்( ம்..32 வயதிலேயே !).
நிலத்தின் மூன்றடிக்குள் கிடைத்த மண்டையோடு மற்றும் எலும்புக்கூடுகள் இறந்த அரசனுடையதுதானா? என்பதற்கான சோதனையின் முதல் கட்ட ஆய்வில்…
எலும்புக்கூட்டின் நிலை அதாவது முகம் மற்றும் தலையில் எலும்புகள் உடைந்த நிலை,சண்டையில் உடைந்து வளைந்த முதுகு எலும்பு இவற்றை கொண்டு .( MRI scan)எம் ஆர் ஐ ஸ்கேன் மூலம் உறுதி படுத்தப்பட்டது. இரண்டு வேதியல் ஆய்வுகள் செய்யப்பட்டன.
”ரேடியோ கார்பன் ஆய்வில்” எலும்பின் காலம் கணிக்கப்பட்டது(1455 லிருந்து 1540க்குள்). அடுத்து மரபியல்( டிஎன் ஏ )சோதனைக்காக அந்த அரசனுடைய வழித்தோன்றல்களிடமிருந்து பெறப்பட்ட டிஎன் ஏ உடன் ஒப்பீடு செய்யப்பட்டது.
சேக்ஸ்பியரின்(Shakespeare) ”ரிச்சர்ட் III ” என்ற நாடகம் அவரால் 1592 ல் எழுதப்பட்டிருக்கலாம். இதில் ரிச்சர்டின் இறப்பு குறித்த தகவல்கள் உண்மைதான் என்பது இந்த கண்டுபிடிப்பின் படி உறுதியாகிறது !! என்கிறார்கள்.

No comments:

Post a Comment