புலி ஆண்டை வரவேற்க புலி!
வெறும் ஒரு மில்லிமீட்டர் உயரம், 1.2 மில்லி மீட்டர் அகலத்தில் மிக மிகச் சிறிய புலி சிற்பத்தை உருவாக்கியுள்ளார் ஒரு சிற்பி. சம்பவம் நடந்தது இங்கில்லை, தைவானில். பிப்ரவரி மாதம் 14ம் தேதி அவர்களுக்கு புலி ஆண்டு தொடங்குகிறதாம். அதை வரவேற்பதற்குத்தான் இந்த புலி சிலை என்கிறார், அதை வடிவமைத்த 54 வயது சிற்பி சென் பிராங் ஷென். செயற்கை பிசினில் வடிக்கப்பட்ட இந்த புலி சிற்பம், ஊசி துவாரத்தைவிட சிறிது என்றால் பார்த்துக்கொள்ளுங்களேன். கடந்த முப்பது ஆண்டுகளாக சிற்பங்கள் வடித்து வருகிறேன். இந்த புலி சிற்பத்தை வடிக்க ஒரு நாளைக்கு நான்கு மணி நேரம் வீதம் மூன்று மாதங்கள் செலவழித்திருக்கிறேன். ரொம்ப சிறிதான இந்தப் புலி சிற்பம் எந்த திசையில் இருந்து பார்த்தாலும் தத்ரூபமாக இருக்கும் அளவிற்கு 3டி முறையில் தயாரித்துள்ளேன். அதிலும், இதில் வர்ணம் தீட்ட நான் பட்ட பாடு எனக்கு மட்டும்தான் தெரியும். 95 ஆயிரம் டாலர் விலை மதிப்புள்ள இந்த புலி சிற்பத்தை எக்காரணத்தைக் கொண்டும் விற்கப்போவதில்லை என்கிறார் ஷென்.
Saturday, 6 February 2010
ஆசை தந்த சாவு

கைக்கு எட்டினது வாய்க்கு எட்டவில்லையே!
இந்தப் பழமொழி எதுக்கு பொருந்துதோ இல்லையோ... நான் இப்போ சொல்லப்போற விஷயத்துக்கு கரெக்ட்டா பொருந்தும். அம்மையார் பெயர் மெக்டோனால்ட். 47 வயதான இவர் ஒரு லாட்டரி சீட்டுப் பிரியர். அம்மணிக்கு சமீபத்துல லாட்டரி சீட்டுல நம்ம ஊர் பணத்துக்கு 2 லட்சத்து 55 ஆயிரம் ரூபாய் பரிசு விழுந்திருக்கு. பரிசைப்பார்த்ததும் அம்மணிக்கு பயங்கர குஷி. தலைகால் புரியவில்லை. இந்தப் பரிசில் தன்னுடைய கணவனுக்கு பெரிய அளவில் பரிசு வாங்கிக் கொடுக்க வேண்டும் என்ற ஆசை. போறதுதான் போறோம் லைட்டா கொஞ்சம் போதை ஏத்திக்கிட்டா நல்லாயிருக்குமேன்னு நினைச்சுக்கிட்டு, ஒரு குவாட்டரை வாங்கி உள்ள விட்டுக்கிட்டு சாலையில் நடந்து வந்துட்டு இருந்துருக்காங்க. அப்போ பார்த்து எங்கிருந்தோ வந்த கார், டோனால்ட் மீது மோதிவிட, அம்மணி ஸ்பாட்டுலேயே காலி. அவர் யார் என்று சோதித்துப் பார்த்த போலீஸார் அவர் பையில் வைத்திருந்த லாட்டரி சீட்டு வென்ற தொகை, லாட்டரி சீட்டு இவற்றையெல்லாம் எடுத்துப் பார்த்து, ‘சோ சேட்’னு துக்கம் தெரிவிச்சிருக்காங்க. பரிசு விழுந்த முழுத் தொகையையும் முழுசா அனுபவிக்காம இப்படி அற்ப ஆயுசுல போன டோனால்ட்டுக்கு நான் சொன்ன பழமொழி பொருந்தும்தானே!
அனகோண்டா

அனகோண்டாவிற்கு வயது 6 கோடி!
‘அனகோண்டா’ படத்தை நம்மில் பலர் பார்த்திருப்போம்! மிகப்ப்ப்ப் பெரிய பாம்பு ஒன்று எல்லோரையும் அடித்து துவம்சம் செய்யும். கப்பலை கவிழ்த்தும், ஆட்களை விழுங்கிக் கொல்லும். இப்படி பிரம்மாண்டமாய் நாம் பார்த்த பாம்பு உண்மையிலே இருக்கிறதா...? அல்லது ஹாலிவுட்காரர்களின் கற்பனையா என்று நம்மில் பலருக்கு சந்தேகங்கள் ஏற்படலாம். ஆனால், சந்தேகமே வேண்டாம் அனகோண்டா பாம்பு உண்மைதான் என்று அடித்து சொல்லியிருக்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள். தென் அமெரிக்காவில் வடக்கு கொலம்பியா பகுதியில் புதைபொருள் ஆராய்ச்சியாளர்கள் ஆய்வு நடத்திக்கொண்டிருக்கும்போது அந்தப் பகுதியில் ஒரு முதலையின் எலும்புக்கூடு ஒன்று கிடைத்திருக்கிறது. அந்த எலும்புக்கூடை பார்க்கும்போது, அது கிட்டத்தட்ட 6 கோடி ஆண்டுகளுக்கு முற்பட்டது என்று தெரியவந்துள்ளது. அந்த படிவம் கிடைத்த பத்து அடி துõரத்திற்குள்ளாகவே இன்னொரு எலும்புக்கூடின் படிவம் கிடைத்திருக்கிறது. 46 அடி நீளம் கொண்ட அந்தப் படிவம் டைட்டனோபா வகை (அதாங்க அனகோண்டா வகையறா) பாம்பாம்பாகத்தான் இருக்கும் என்று சொல்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள். இவர்கள் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட பகுதி உலகத்திலேயே மிகப்பெரிய நிலக்கரி சுரங்கம் இருந்த பகுதி என்பது குறிப்பிடத்தக்கது.
பிட்ஸ் தகவல்கள்
நீங்களும் ஸ்பைடர்மேன்தான்!‘ஸ்பைடர்மேன்’ படங்களை நீங்கள் எல்லாரும் கண்டிப்பாக பார்த்திருப்பீர்கள். செங்குத்தாக உள்ள கட்டடத்தில் அனாயசமாக இரண்டு கைகளையும் வைத்து சர் சர்ரென்று அவர் ஏறும் விதம் பார்க்கும் நமக்கு பிரமிப்பாக இருக்கும். இதெல்லாம் படத்தில் மட்டும்தான் சாத்தியமாகும். நிஜத்தில் சாதாரண மனிதர்களால் இதையெல்லாம் செய்யவா முடியும்? என்று கேள்வி எழுந்தாலும், மனதிற்குள் இதே மாதிரி உண்மையிலேயே இருந்தால் எப்படி இருக்கும்? நாமும் அப்படியே ஸ்பைடர் மேன் மாதிரி சர்ரென்று பிரமாண்டமான கட்டடங்களில் ஏறலாமே என்ற ஆசை இருக்கும்.
ஒரு ஆச்சர்யமான செய்தி... நீங்கள் ஆசைபட்டது நடக்கப்போகிறது. இனி நீங்களும் ஸ்பைடர்மேன் போல செங்குத்தான கட்டடத்தில் எந்த பிடிமானமும் இல்லாமல் அனாசயமாக ஏறலாம். இதற்காக பிரத்யேகமாக ஒரு சாதனத்தை கண்டுபிடித்துள்ளார்கள் ஆராய்ச்சியாளர்கள். இவர்கள் கண்டுபிடித்துள்ள இந்த சாதனம் தட்டையாக கையில் மாட்டிக்கொள்ளும் அளவிற்கு இருக்கும். அதில் மிக நுண்ணிய அளவில் சிறிய சிறிய துவாரங்கள் இருக்கும். இந்த துவாரங்களில் இருந்து வெளிவரும் திரவமானது பரப்பு இழுவிசை சக்தியின் காரணமாக நாம், கட்டடத்தின் சுவரை அப்படியே உடும்பு மாதிரி பிடித்துக்கொள்ளுமாம். பின்ன என்ன சாதனத்தை வாங்குங்க... கட்டடத்துல ஸ்பைடர் மேன் மாதிரி ஏறுங்க. ஒரு கொசுறு செய்தி: இது இன்னும் விற்பனைக்கு வரலை. கூடிய சீக்கிரம் வந்துடும்.
எனெர்ஜி கார்னர்
எனர்ஜி கார்னர்!வாழ்க்கையில் எல்லா மனிதர்களும் விரும்புவதும், வேண்டுவதும் ஒன்றை மட்டும்தான். அது எது தெரியுமா... வெற்றி. தான் எதைத் தொட்டாலும் வெற்றி பெற்றுவிட வேண்டும். இந்த எண்ணம் மனிதராய் பிறந்த ஒவ்வொருவருக்கும் இருக்கத்தான் செய்கிறது. இதில் யாருக்கும் எந்தவித மாற்றுக் கருத்தும் இருக்காது என்று நினைக்கிறேன்.
ஆனால், இந்த வெற்றி என்ற இந்தக் கனி எல்லாருக்கும் உடனடியாக கிடைத்து விடுகிறதா... என்றால் இல்லை என்றுதான் சொல்லவேண்டும்.
சிலருக்கு உடனே... சிலருக்கு கொஞ்ச நாள் கழித்து... ஆனால், சிலருக்கோ இந்த வெற்றிக்காக போராட்டம் மட்டுமே வாழ்வின் பாதி நாளை குடித்துவிடுகிறது. நிமிர்ந்து பார்த்தால் முதுமை மட்டுமே மிஞ்சுகிறது. வெற்றி மட்டும் இன்னும் கிடைத்தபாடில்லை. நான் சொல்வது சரிதானே...!
வெற்றி என்பதை ஒருவர் சுவைத்துவிட்டால் போதும், இவனுக்கு உடம்பெல்லாம் மச்சம்டா... என்று ஒரே ஒரு வார்த்தையில் சொல்லிவிடுவோம்.
ஆனால், அவரிடம் போய்க் கேளுங்கள்... அதை அடைய அவர் பட்ட கஷ்டங்களும், அவமானங்களும் அப்போது உங்களுக்குத் தெரியும்.
சமீபத்தில் ஒரு நண்பரை சந்தித்தேன். ரொம்பவும் ஏழ்மையானவர்தான். ஆனால் திறமைசாலி. எந்த வித கெட்டப் பழக்க வழக்கங்களும் கிடையாது. நம்மில் இருக்கும் பலரின் குணாதிசயங்களின் அடையாளங்களாக அவர் ஒருவர் இருந்தார்.
இன்னும் வாழ்க்கையை வெல்வதற்காக ஓடிக்கொண்டு இருக்கிறார். என்றாவது ஒரு நாள் நானும் இந்த சமுதாயத்தில் பெரிய ஆளாவேன். என்ற தன்னம்பிக்கை ரேகை இன்னும் அவருள் ஓடிக்கொண்டுதான் இருக்கிறது. இதே எண்ணம்தானே நமக்குள்ளும் ஓடிக்கொண்டு இருக்கிறது என்றுதானே நீங்கள் நினைக்கிறீர்கள்.
அவர் ஒரு திறமைசாலி என்று சொன்னேனே... முதலில் அதற்கு வருகிறேன். அந்த நண்பர் காகிதத்தில் அணிகலன்கள் செய்து வருகிறார். ஆங்கிலத்தில் அதை ‘பேப்பர் ஜுவல்ஸ்’ என்பார்கள். பலபேருக்கு தெரியாத இந்த அணிகலன்கள் வெளிநாட்டில் அவ்வளவு கிராக்கி.
இங்கே அவர் அந்த அணிகலன்களை வெறும் ஐம்பது ரூபாய்க்கும், நுõறு ரூபாய்க்கும் விற்று வருகிறார். கடும் உழைப்பு, கடும் தன்னம்பிக்கை, விடாமுயற்சி இவ்வளவு இருந்தும், அவர் இன்னும் நகரத்தில் ஏதோ ஒரு மூலையில் யாருக்கும் தெரியாத இடத்தில் ஐம்பதுக்கும், நுõறுக்கும் அல்லாடிக்கொண்டு இருக்கிறார்.
இதில் தவறு யாருடையது? கொஞ்சம் யோசித்துப் பாருங்கள். தான் தயாரிக்கும் பொருளின் தேவை சந்தையில் இப்போது எப்படி இருக்கிறது? யார் விரும்புகிறார்கள். இதை எந்த வடிவத்தில் வடிவமைத்தால், சந்தைப் படுத்தல் இன்னும் எளிமையாக இருக்கும்? அல்லது தன்னுடைய திறமைகளுக்கான அங்கீகாரம் தருவதற்கு யாரும் தயாராக இருக்கிறார்களா...? என்பதைப் பற்றிய தேடலுக்கு அந்த நண்பர் தயாராகி இருந்தால், இன்று அவர் நகரத்தின் ஏதாவது ஒரு மூலையில் இருக்க வேண்டிய அவசியம் வந்திருக்குமா...? மாட மாளிகை கட்டி, காரில் அல்லவா பவனி வந்திருப்பார்.
அவரும் சமுதாயத்தில் முக்கிய இடத்தை அடைந்திருப்பார் அல்லவா?
முன்பு சென்னையிலிருந்து டில்லிக்கு செல்லவேண்டுமானால், மூன்று நாட்கள் ஆகும். ஆனால், இன்று அப்படியா... இன்டர்நெட், ஊடகம், விஞ்ஞான வளர்ச்சி என்று இப்போது உலகம் சுருங்கிவிட்டது. நம்முடைய தேவைகளுக்கான ஆதாரங்கள் அனைத்தும் நம் கைக்கு எட்டும் துõரத்தில்தான் இருக்கிறது. ஆனால்... இவை எவையற்றுமையே தேடாமல், வாய்ப்பு தன்னைத் தேடி வரும் என்று அமர்ந்திருந்தால், அது எப்படி...?
உண்மையான உழைப்பு, நேர்மை இருந்து என்ன பயன்? வாய்ப்புகளை தேடி அலைய அவர் துணியவில்லையே... ஏன்? இந்தக் கேள்விக்கு ‘தான்’ என்ற அகந்தை, அகங்காரம் என்று ஏதாவது ஒன்றை பொருளாக வைத்துக்கொள்ளலாமா? இல்லவே இல்லை. இதற்கு இவைகள் காரணம் இல்லை. அப்போது வேறு என்னதான் காரணம்... ஆழ்ந்து யோசித்துப் பாருங்கள். அதற்கு ஒரே விடை... கூச்சம்!
இந்த தடைக்கல்தான் நம் வளர்ச்சியின் எல்லா பக்கங்களையும் மூடிக்கொண்டு விடுகிறது. தன்னிடம் உள்ள திறமைகளை மற்றவர்களிடம் எடுத்துச் சென்று காட்டி, வாய்ப்புத் தேடி அலைந்தால், தன்னுடைய திறமைக்கு பங்கம் வந்துவிடுமோ என்ற தேவையில்லா அச்சம்தான், நம்மில் பெரிய பெரிய திறமைசாலிகளை முடக்கிப்போட்டுள்ளது.
உங்கள் திறமைகளை எடுத்துச்சொல்ல, உங்களைப் பற்றி சிறப்பாக சொல்ல இந்த உலகத்தில் வேறு யார் இருக்கிறார்? யோசித்துப் பாருங்கள். யாரும் இல்லை... என்ற பதில்தான் வரும்.
யாரும் இல்லாத போது இந்த தயக்கத்தை இந்த கூச்சத்தை உடைத்து வெளியே வர வேண்டாமா?. திறமைகளைச் சொல்லி வாய்ப்புகளைக் கேளுங்கள். சில சமயங்களில் ஏமாற்றங்கள் ஏற்படலாம். அவமதிக்கப்படலாம். உங்கள் திறமைகள் நிராகரிக்கப்படலாம். ஆனால், தொடர்ந்து முயற்சி செய்யுங்கள். உங்கள் வெற்றி எட்டும் துõரத்தில்தான் இருக்கிறது. கண்டிப்பாக தொட்டுவிடுவீர்கள். அதைத் தொட்டப்பின், நீங்கள் சந்தித்த ஏமாற்றமும், அவமானமும், நிராகரிப்பும் உங்கள் துச்சமாய் தள்ளி நிற்கும். அது மற்றவர்களுக்கு படிப்பினையை சொல்லித்தரும் ஆசானாக இருக்கும். இன்று சமுதாயத்தில் பேரும், புகழும் பெற்றவர்களின் கதைகள் எல்லாம் ஏமாற்றம், அவமானம், நிராகரிப்பு இவற்றை எல்லாம் தாண்டி வந்ததுதான் என்பதை என்றைக்கும் நினைவில் வைத்துக்கொள்ளுங்கள். இதற்கு ஒரு சின்ன உதாரணத்தைச் சொன்னால் நன்றாக இருக்கும் என்று நினைக்கிறேன்.
நான் படித்த ஒரு கதையை உங்களுக்குச் சொல்கிறேன். ஒரு அரசனுக்கு ஒரு ஓவியன் எழுதிய கடிதம்...
‘யுத்த தளவாடங்கள் தயாரிப்பதில் தம்மை விற்பன்னர்களாகக் கூறிக்கொள்பவர்களின் தயாரிப்புகளைப் பார்த்தாலே அவை எவ்வளவு சாதாரணம் என்பது விளங்கும்.
மிகவும் லேசானதும் வலுவானதுமான பாலங்கள் என்னால் உருவாக்க இயலும். அவற்றை எளிதில் எடுத்துச் செல்லலாம், எதிரிகளிடமிருந்து தப்பிக்கப் பயன்படுத்திக்கொள்ளலாம்; தீயினாலும் யுத்தத்தினாலும் அழிக்க முடியாதபடி பாதுகாப்பானவை; கொண்டுபோய் நிர்மாணிப்பது எளிமையானது மற்றும் வசதியானது. அத்துடன் எதிரியின் பாலங்களை அழிப்பதற்கும் எரிப்பதற்குமான வழிவகைகளும் நான் வடிவமைத்த கருவிகள் செய்யும்.
ஓரிடம் முற்றுகையிடப்படும்போது, பதுங்கு குழிகளிலிருந்து தண்ணீரை அகற்றுவது எப்படி, தினுசு தினுசான பாலங்களை உருவாக்குவது எப்படி என்றெல்லாம் எனக்குத் தெரியும்.
ஓரிடத்தை முற்றுகை இடுகையில் குண்டு வீசித்தாக்குதல் சாத்தியமற்றது; அப்படியான அரண்கள் பாறை மீது இருப்பினும் அழிப்பதற்கான வழிமுறைகள் என்னிடம் உள்ளன.
கடலில் நிகழும் யுத்தங்களுக்கேற்ற எல்லாவிதமான இயந்திரங்களும் உள்ளன; பெரிய துப்பாக்கிகளின் தாக்குதல்களுக்கு ஈடு கொடுக்கும் மரக்கலன்களும் இருக்கின்றன.
குறிப்பிட்ட இடத்திற்கு, ஆற்றினுõடே கடந்து செல்வதாயினும், செல்லும் வகையில் ரகசியமானதும் சுற்றி வளைந்து போவதுமான சுரங்க வழிகளை ஏற்படுத்தும் உபாயங்களும் என்னிடம் கைவசம் உள்ளன.
பாதுகாப்பானதும், தாக்க முடியாததுமான எனது தேர்களின் பின்வரும் தரைப்படை, தங்குதடை இல்லாமல், காயம்படாமல் வந்து சேரும்; எதிரிப் பிரதேசத்திற்குள் நுழைந்துவிட்டால் அவர்களால் தொட முடியாது போகும்.
தேவைப்பட்டால் பெரிய துப்பாக்கிகளையும் லேசான தளவாடங்களையும் செய்து தருவேன்.
குண்டு வீசித்தாக்குவது, தோற்றுவிடும் இடங்களில் பல்வேறான தாக்குதல்களையும் தற்காப்புகளையும் என்னால் வகுத்தளிக்க இயலும்.
மேலே குறிப்பிட்டவற்றில் ஏதேனும் சாத்தியமற்றதாக உங்களுக்கு தோன்றுமேயானால், சோதனை செய்து காட்ட நான் தயார்.’
இந்த கடிதம் முழுவதையும் படித்தீர்கள் அல்லவா? தன்னுடைய திறமைகளை தானே எடுத்துச் சொல்லும் கடிதம் இது. தன் மீதுள்ள அசாத்திய நம்பிக்கை. அதை நிரூபிக்கும் மனப் பக்குவம் எல்லாமே இந்தக் கடிதத்தில் இருக்கிறது. சரி... இந்தக் கடிதம் யார் எழுதியது தெரியுமா... மோனோலிசா என்ற உலகப் புகழ்பெற்ற ஓவியத்தை வரைந்த ஓவியர் லியானார்டோ டாவின்ஸி எழுதியதுதான். இவ்வளவு உலகப் பிரசித்திப் பெற்ற ஓவியர் கூட ஆரம்ப காலத்தில், நான் திறமையானவன், என் திறமைகளை சோதித்துப்பாருங்கள் என்று பகிரங்கமாக வாய்ப்புக் கேட்டதால்தான், இன்று அவர் உலகறிந்த ஓவியரானார். அவரின் ஓவியங்கள் இன்று கோடி ரூபாய்க்கு மேல் விலை போகின்றன. அவருடைய மோனாலிசா ஓவியம், அறிஞர்களின் ஆராய்ச்சியில் இன்று வரை இருக்கிறது என்றால் பார்த்துக்கொள்ளுங்கள்.
திறமை யாரிடத்தில்தான் இல்லை... ஆனால், எத்தனை பேரால் கூச்சத்தை துறந்து மற்றவர்களிடம் சென்று வாய்ப்பு கேட்க முடிகிறது. சிந்தியுங்கள்... இந்த கூச்சத்தை உடைத்தால், நீங்களும் உலகின் தலைசிறந்த மனிதராகலாம். வாய்ப்பு பெறுவதற்கான சாவி உங்களிடத்தில்தான் இருக்கிறது. அதை வேறெங்கிலும் தேடி அலைய வேண்டாமே!
Wednesday, 3 February 2010
பழம் சாப்பிட்டா குழந்தை பிறக்காது
இப்படியும் பயமுறுத்துறாங்க:கல்யாணம் முடிஞ்சி மறுவருஷம் குழந்தை பிறந்திடணும். இல்லாட்டி அவ்வளவுதான்... அந்தப் பெண் வாங்கும் ஏச்சுப் பேச்சுக்கள் எல்லாம் உலகறிந்த விஷயம்தானே!. இதற்காக கல்யாணம் முடிஞ்ச மறுவருஷமே எப்படியாவது பொண்ணுக்கு குழந்தை பொறந்திடணும் என்று, புதுப்பெண்ணுக்கு, பார்த்து பார்த்து பழங்கள், சத்தான உணவுப் பொருட்கள் வீட்டார் வாங்கிக் கொடுப்பதும் வழக்கம். ஆனா, இதுலதான் இப்போ ஒரு சிக்கல் வந்துருக்கு.
அதாவது நார் சத்துள்ள உணவுப் பொருட்கள் அதிகளவில் சாப்பிட்டால், குழந்தை உருவாவது தள்ளிப்போகும் என்று கண்டுபிடித்துள்ளார்கள் அமெரிக்க ஆராய்ச்சியாளர்கள். நார் சத்துள்ள உணவுப்பொருள்னா என்னன்னு குழம்ப வேண்டாம். பழவகைகள்தான். பழவகைகள் அளவுக்கு அதிகம் சாப்பிட்டா, கரு உண்டாவதில் கால தாமதமாகும் என்று கூறியுள்ளார்கள் ஆராய்ச்சியாளர்கள். நார்ச்சத்துள்ள உணவுப்பொருள் அதிகளவில் சாப்பிடுவதால், கருமுட்டை உருவாவதற்காக சுரக்கும் ஹார்மோனின் அளவு குறைந்து போகும். அதனால், குழந்தை பாக்யம் கிடைக்க ஆண்டுகள் தள்ளிப்போகும் என்று எச்சரித்துள்ளார்கள் ஆராய்ச்சியாளர்கள்.
நீங்க திருந்துங்க...
நீங்க திருந்துங்க... அவங்க திருந்துவாங்க!
அதிகபட்ச லஞ்சம் எந்தத் துறைக்கு போகுதுன்னு கேட்டவுடனேயே டக்குன்னு நம்ம நினைவுக்கு வரும் துறை, போக்குவரத்து. லைசன்ஸ் வாங்கறதுல இருந்து நம்பர் வாங்கறது வரை... லஞ்சம் கொடிக்கட்டி பறந்துகொண்டு இருப்பது, மக்களாகிய நமக்கு எந்தளவிற்கு தெரிகிறதோ அந்தளவிற்கு அந்தத் துறைக்கும் தெரியும்.
இதைப் பார்த்து கொந்தளித்துப்போன கர்நாடக மாநில போக்குவரத்துத் துறை அமைச்சர் ஆர். அசோக் கூறும்போது, நீங்கள் கொடுப்பது குறைந்தால், அவர்கள் வாங்குவது குறையும். இப்படி லஞ்சம் வாங்குவதற்கு நீங்கள்தான் பொறுப்பு என்று தடாலடியாக கூறுகிறார் அமைச்சர்.
ஒரு காரின் விலை மூன்று லட்சம். ஆனால், அந்த காருக்கு ராசி எண்ணுக்கா ஒரு லட்சம் கூட செலவழிக்க வாடிக்கையாளர் தயாராக இருக்கும்போது, லஞ்சம் எப்படிங்க குறையும்.
பெரும்பாலும் 1, 9, 5555, 9000, 9999, 786 போன்ற எண்களை வாங்குவதற்கு வாடிக்கையாளர்கள் தயாராக இருக்கின்றார்கள். அந்த எண்ணை பெறுவதற்காக அவர்கள் குறுக்கு வழியில் செல்வதற்கும் தயாராக இருக்கிறார்கள். இப்படி இருந்தால் என்ன அர்த்தம்? இவர்களின் பேன்சி எண்களின் மோகம் என்று குறைகிறதோ அன்றுதான் ஓரளவிற்கு லஞ்சமும் குறையும்.
இந்த பேன்சி நம்பர் மூலம் இந்த ஆண்டுக்கு மட்டும் அரசுக்கு பத்துகோடி வருமானம் கிடைத்துள்ளது. ஆனால், லஞ்சமாக எவ்வளவு பணம் கைமாறியதோ... ஆண்டவனுக்குத்தான் வெளிச்சம்!
அதிகபட்ச லஞ்சம் எந்தத் துறைக்கு போகுதுன்னு கேட்டவுடனேயே டக்குன்னு நம்ம நினைவுக்கு வரும் துறை, போக்குவரத்து. லைசன்ஸ் வாங்கறதுல இருந்து நம்பர் வாங்கறது வரை... லஞ்சம் கொடிக்கட்டி பறந்துகொண்டு இருப்பது, மக்களாகிய நமக்கு எந்தளவிற்கு தெரிகிறதோ அந்தளவிற்கு அந்தத் துறைக்கும் தெரியும்.
இதைப் பார்த்து கொந்தளித்துப்போன கர்நாடக மாநில போக்குவரத்துத் துறை அமைச்சர் ஆர். அசோக் கூறும்போது, நீங்கள் கொடுப்பது குறைந்தால், அவர்கள் வாங்குவது குறையும். இப்படி லஞ்சம் வாங்குவதற்கு நீங்கள்தான் பொறுப்பு என்று தடாலடியாக கூறுகிறார் அமைச்சர்.
ஒரு காரின் விலை மூன்று லட்சம். ஆனால், அந்த காருக்கு ராசி எண்ணுக்கா ஒரு லட்சம் கூட செலவழிக்க வாடிக்கையாளர் தயாராக இருக்கும்போது, லஞ்சம் எப்படிங்க குறையும்.
பெரும்பாலும் 1, 9, 5555, 9000, 9999, 786 போன்ற எண்களை வாங்குவதற்கு வாடிக்கையாளர்கள் தயாராக இருக்கின்றார்கள். அந்த எண்ணை பெறுவதற்காக அவர்கள் குறுக்கு வழியில் செல்வதற்கும் தயாராக இருக்கிறார்கள். இப்படி இருந்தால் என்ன அர்த்தம்? இவர்களின் பேன்சி எண்களின் மோகம் என்று குறைகிறதோ அன்றுதான் ஓரளவிற்கு லஞ்சமும் குறையும்.
இந்த பேன்சி நம்பர் மூலம் இந்த ஆண்டுக்கு மட்டும் அரசுக்கு பத்துகோடி வருமானம் கிடைத்துள்ளது. ஆனால், லஞ்சமாக எவ்வளவு பணம் கைமாறியதோ... ஆண்டவனுக்குத்தான் வெளிச்சம்!
Subscribe to:
Posts (Atom)