Monday, 3 September 2012

சங்கீத ஊர் திருவையாறு!



கட்டும் ஆடைகளும், உண்ணும் உணவும் மட்டும்தான் கலாசாரங்களா.. என்று சொன்னால், நிச்சயம் இல்லை என்ற பதில் மட்டுமே வரும். இசையும் ஒரு நாட்டின் கலாசாரமாக இருக்கும் என்பதற்கு எடுத்துக்காட்டாய் விளங்குகிறது கர்நாடக சங்கீதம் வளர்த்த திருவையாறு.
பாப் ரக இசை, ராக் ரக இசையைக் கேட்டவுடனேயே இவையெல்லாம், மேற்கத்திய நாடுகளின் இசை என்று டக்கென்று சொல்லிவிடுவோம். அப்படியானால், இசை ஒரு நாட்டின் கலாசாரம் என்பது சரிதானே. அந்த வகையில் கர்நாடக சங்கீதம் என்பது இந்திய கலாசாரத்தின் அடையாளம். இன்னும் ஆழமாக சொன்னால், கர்நாடக சங்கீதத்திற்கு இலக்கணம் வகுத்துத் தந்த தியாகராஜ சுவாமிகள்  மறைந்த திருவையாறு ஊர் கூட கலாசார சின்னம் என்று சொன்னால் அது மிகையாகாது.
ஒரு கிறிஸ்தவருக்கு ஜெருசலேம் செல்வது எப்படி வாழ்நாள் லட்சியமோ, அதேபோல ஒரு இந்துவுக்கு காசி புனித யாத்திரையும், ஒரு இஸ்லாமியருக்கு மெக்கா புனித பயணம் என்பது ஒரு வாழ்நாள் லட்சியமோ அதேபோல கர்நாடக சங்கீதம் கற்றுக்கொள்ளும் அனைவருக்கும், திருவையாறில் தியாக பிரம்மம் தியாகராஜ சுவாமிகள் நினைவு நாள் அனுசரிக்கப்படும் ஒவ்வொரு ஆண்டும், அவர் நினைவிடத்தில் அமைக்கப்பட்டிருக்கும் மேடையில் தியாகராஜ கீர்த்தனைகள் பாடுவதுதான், கர்நாடக சங்கீதத்தைக் கற்றுக்கொள்ளும் ஒவ்வொரு இசைக்கலைஞர்களின் வாழ்நாள் லட்சியமாக இருக்கும்.
கர்நாடக சங்கீதம் இந்து வேதங்களில் இருந்து உருவானது. 12 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்திலேயே கர்நாடக சங்கீதம் இந்தியாவில் மக்களிடையே பாடப்பட்டுக்கொண்டுதான் இருந்தது. ஆனால், அப்போது அதற்கான நெறிமுறைகள், வரையறைகள் எதுவும் வகுக்கப்படவில்லை. பெயரளவில் மட்டும் இருந்ததாலோ என்னவோ, அந்த சங்கீதத்தை வளர்ப்பதற்கான முயற்சிகளில் யாரும் ஈடுபடவில்லை. ஆனால் 14 ஆம் நூற்றாண்டின் இடைப்பகுதியில் புரந்தர்தாசா  என்பவர் கர்நாடக சங்கீதத்திற்கு ஒரு வரையறையை அமைத்துக்கொடுத்தார். கர்நாடக சங்கீதத்திற்கான அடிப்படைகளை  புரந்தர்தாசர் வகுத்தபடியால் இவரை கர்நாடக சங்கீதத்தின் தந்தை என அழைக்கப்படுகிறார். இவருக்குப் பின்னர் வந்த வெங்கடேஷ்வரா என்பவர்தான் ராகங்களின் அடிப்படைகளை வகுத்துக்கொடுத்தார். புரந்தர் தாசாவின் காலம் 1564 ஆம் ஆண்டோடு முடிவடைந்தது. 16 மற்றும் 17 ஆம் நூற்றாண்டுகளில்  விஜயநகரப் பேரரசு வளர்ச்சியடைந்தகாலத்தில் தஞ்சை மாவட்டத்தில் கர்நாடக சங்கீதம் தீவிரமாக பரவ ஆரம்பித்தது. அந்தக் காலக்கட்டத்தில் தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறில் கர்நாடக சங்கீதத்திற்கு தனி இலக்கணம் அமைத்துக் கொடுத்தவர்தான் தியாகராஜ சுவாமிகள்.
18ஆம் நூற்றாண்டில் இருந்து 20 ஆம் நூற்றாண்டுகளில் கர்நாடக சங்கீத வளர்ச்சிக்கு பக்கபலமாய் இருந்ததுகர் மைசூர் சமஸ்தானமும், திருவாங்கூர் சமஸ்தானமும்தான். 18 - 20 ஆம் நூற்றாண்டின் இடைவெளியில்தான் கர்நாடக சங்கீதத்திற்கு வாய்ப்பாட்டு மட்டும் அல்லாமல் பாட்டுடன், இசைக்கும் முக்கியத்துவம் வளர ஆரம்பித்தது. இசைக்கலைஞர்கள் பாட்டோடு வீணை, வயலின் , கடம், புல்லாங்குழல், மிருதங்கம் போன்ற இசைக்கருவிகளையும் இசைக்க  ஆரம்பித்தார்கள். ஆகமொத்தத்தில் இன்று நாம் கர்நாடக சங்கீத கச்சேரிகளில் பயன்படுத்தப்படும் வாத்தியங்கள் பயன்படுத்தப்படுவதற்கு காரணகர்த்தாவாக இருந்த பெருமை மைசூர் சமஸ்தானத்திற்கும், திருவாங்கூர் சமஸ்தானத்தையுமே சாரும்.
கர்நாடக சங்கீதம் என்பது கர்நாடகம், கேரளம், ஆந்திரம், தமிழகம் போன்ற தென் மாநிலங்களுக்கும் பாத்தியப்பட்டது என்று பொதுவாக சொல்லப்பட்டாலும்,கர்நாடக சங்கீதத்தின் பெயரைச் சொன்னவுடன் நினைவுக்கு வரும் ஒரே பெயர் திருவையாறு மட்டும்தான்.
1759 முதல் 1847ம் ஆண்டு வரை தியாகராஜ சுவாமிகள் வாழ்ந்த காலத்தை, “தியாகராஜ சகாப்தம்’ என்றுதான் சொல்வார்கள். திருவாரூரில் வசித்த ராமபிரும்மம் - சாந்தாதேவி தம்பதிக்கு மூன்றாவது தெய்வக் குழந்தையாக அவதரித்தார் தியாகராஜர்.  குடும்பச் சூழ்நிலையின் காரணமாக பிற்காலத்தில் இவரது  குடும் பம் திருவையாறுக்கு இடம் பெயர்ந்தது.
தியாகராஜ சுவாமிகளின் தந்தையின் ரத்தத்திலேயே ஊறிப் போன விஷயம் சங்கீதம். எனவே, இவருக்கு இசையுணர்வு இயற்கை சுபாவமாக அமைந்தது. குரல் வளமும் கை கொடுத்தது. தாயாரிடம் ராமதாசர், புரந்தரதாசர் கீர்த்தனைகளைக் கற்றுக் கொண்டார். திருவையாறிலுள்ள சமஸ்கிருத கல்லூரியில் சேர்ந்து நான்கு ஆண்டுகள் ராமாயணம் படித்தார். மிகுந்த புலமை பெற்றார். தஞ்சை மராட்டிய மன்னர் சரபோஜியின் அரசவைக் கவிஞர் சொண்டி வெங்கட ரமணய்யா விடம் சங்கீதம் கற்றார் தியாகராஜர். “நமோ நமோ ராகவாய அதிசம்’ என்பது தான் அவரது முதல்பாடல். சங்கீதத்திலுள்ள தன் சந்தேகங்களைத் தீர்த்துக் கொள்ள, நாரத மந்திரத்தை உபதேசித்தார். அவர், “ஸ்வராவர்ணம்’ என்ற அரிய நூலைத் தந்து, சங்கீத ஸ்வர ரகசியங்களை அறியச் செய்தார்.
அவருக்கு பல சீடர்கள் இருந்தனர். அதில், ஒருவர் செய்த தவறுக்காக அவரைக் கோபித்துக் கொண்டார். அப்போது அவரது மனைவி, கோபப்படுவதால் ஏற்படும் விளைவுகளை எடுத்துக் கூறினார். அதை மையமாகக் கொண்டு எழுந்த பாடலே புகழ் பெற்ற, “சாந்தமுலேக சவுக்கியமுலேது’ என்பதாகும். ராமனைப் பற்றி மட்டுமே பாடிய அவர், சிவபக்தையான அவரது மனைவியின் அறிவுரையை ஏற்று, “சம்போ மஹாதேவ’ போன்ற பாடலையும் பாடினார்.
அவரது புகழ் பரவியதைப் பொறுக்காத சகோதரர் ஜப்யேசன், அவரது பாடல் தொகுப்புக்கு தீ வைத்து விட்டார். ஏராளமான கீர்த்தனைகள் அழிந்து விட்டன. ராம விக்ரகத்தையும் திருடிச் சென்று காவிரியில் போட்டார். தியாகராஜர் துடித்தார். “அநியாய முஸேயகுரா ரானிது ராது’ என்ற பாடலை உருக்கமாகப் பாடினார். ராமன் கனவில் தோன்றி, தான் ஆற்றுமணலில் புதைந்திருக்கும் இடத்தைச் சொல்லவே, அதை எடுத்து வந்தார். உடனே, “தொரிகிதிவோ’ (நீ எப்படித்தான் மீண்டும் கிடைத்தாயோ) என்ற பாடலைப் பாடினார்.  ராமனே கதியாக வாழ்ந்த அவர், பகுளபஞ்சமியன்று  காலமானார். தியாகராஜருக்கு குரு மரியாதை எப்பவுமே உண்டு. தான் வாழும்போது தன்  சீடர்களுக்கு அவர் ஒரு கட்டளையிட்டிருந்தார். தன் காலம் முடியும் தருவாயில் தன் சடலத்தை தன் குருவின் சமாதிக்கு அருகிலேயே அடக்கம் செய்யவேண்டும் என்று கட்டளையிட்டிருந்தார். அவர் இட்ட கட்டளையின் பெயரில் அவரின் குருவின் கல்லறைக்குப் பக்கத்திலேயே இவரது சமாதியும் அமைக்கப்பட்டது. பெங்களுரூவைச் சேர்ந்த நாகம்மாள் என்பவர், 1925ல் தியாகராஜருக்காக  கட்டிய சமாதியில்தான், தற்போது தியாகராஜ ஆராதனை விழா நடந்து வருகிறது.
ஒவ்வொரு ஆண்டும் தியாகராஜ சுவாமிகள் நினைவு நாளில் இந்த ஆராதனை விழா நடைபெறும். இந்த விழாவில் புகழ்பெற்ற இசைக்கலைஞர்கள் நூற்றுக்கணக்கானோர், தியாகராஜ கீர்த்தனைகளை மனமுறுகிப் பாடுவார்கள். கர்நாடக சங்கீதத்தை உயிராக நேசித்து, சங்கீதம் கற்றவர்களுக்கும், கற்றுக்கொண்டிருப்பவர்களுக்கும், இனி கற்கப்போகிறவர்களுக்கும், இந்த ஆராதனைவிழாவில் பாடுவதுதான் வாழ்நாள் லட்சியமாய் இருக்கும். அப்படிப்பட்ட இசை ஆராதனை விழாவைக் காண வெளிநாட்டுப் பயணிகள் கூட சமீப காலங்களில் வர ஆரம்பித்திருக்கிறார்கள் என்றால், கர்நாடக சங்கீதம் வளர்த்த திருவையாற்றை இந்திய அடையாளங்களில் ஒன்று சொல்வது மிகையாகாததுதானே!


கேரளத்து கதகளி!


ஒவ்வொரு மனிதருக்கும் ஒரு அடையாளம். அந்த அடையாளம் அவனுடைய குணத்தை, பண்பை, செயலைக் காட்டும். அது, உடுத்தும் உடையாக இருக்கலாம். பேசும் பேச்சாக இருக்கலாம். உண்ணும் உணவாக இருக்கலாம். அதேபோல நாட்டின் கலாசாரம் ஒவ்வொரு மாநிலங்களின் தனித்தனியான அடையாளங்களின் ஒட்டுமொத்த தொகுப்பாகத்தான் இருக்கிறது. அது, உணவு, உடை, அலங்காரம், நாட்டியம் கட்டடக்கலை போன்ற பல்வேறு கூறுகளாக ஒரு மாநிலத்தின்  கலாசார அடையாளமாக தனித்து நிற்கிறது.
அந்த வகையில் தமிழகத்தின் அண்டை மாநிலமான கேரளத்தின்  பெயரைச் சொன்னவுடன், முகத்தில் கலர் கலராக வண்ணம் தீட்டி, கண்களை உருட்டி உருட்டி ஆடும், கதகளிதான் சட்டென்று கண்முன் வந்துபோகும். கதகளி என்பது கேரள மாநிலத்தின் கலாசார நடனம் என்றாலும், இந்த நடனத்தின் ஆரம்பப்புள்ளி இருந்தது கொல்கத்தாவில்தான். கதகளி நடனம் தோன்றியே கதையே கொஞ்சம் சுவராஸ்யம்தான்.
அது 17ஆம் நூற்றாண்டு. கேரள மாநிலத்தின் மிகப்பெரிய சாம்ராஜ்ஜியமாக விளங்கிய பகுதிதான் கொட்டாரக்கரா. இந்தப் பகுதியை தம்புரான் என்ற மகராஜா ஆண்டுகொண்டிருந்தார்.  தம்புரான் மகராஜாவிற்கு எப்போதும் நடனம், நாட்டியம், நாடகம் போன்றவற்றின் மீது அலாதிபிரியம். ஒரு முறை கல்கத்தாவிற்கு வணிக நோக்கில் பயணம் மேற்கொண்டிருந்தார்.  தம்புரானிற்கு புதிதாக ஏதாவது ஒரு இடத்திற்குச் சென்றால், அந்த இடத்தின் பாரம்பரியங்களை தெரிந்துகொள்வதில் முழுமையாக நேரத்தை செலவிடுவார்.
அன்  தன் அமைச்சர்கள் சகாக்களுடன்  வீதி உலா வந்துகொண்டிருந்தார். அப்போது வீதியில் கடவுள் கிருஷ்ணனின் கதையைச் சொல்லும் கிருணன் ஆட்டம் எனும் நிகழ்ச்சி நடந்துகொண்டிருந்தது. உலா வந்த தம்புரான் நாட்டியத்துடன் கூடிய அந்த கிருஷ்ணன் கதை சொல்லும் நிகழ்ச்சி ரொம்பவே பிடித்துப்போயிற்று. கிருஷ்ணன் ஆட்டம் முடியும் வரை பொருமையாக இருந்து வேடிக்கை பார்த்தவர், நாட்டிய அரங்கேற்றம் முடிந்த உடன் அந்த நடனக் கலைஞர்களை சந்திக்கச் சென்றார். அந்த நடனக் குழுவின் தலைவர் பெயர் சமோரின். சமோரின் கிருஷ்ணரின் தீவிர பக்கதர். கிருஷ்ணன்  மீது உள்ள காதலால், கிருஷ்ணர் பற்றி சமஸ்கிருதத்தில் பல்வேறு கதைகளை எழுதியுள்ளார். கதைகளோடு மட்டும் நிறுத்திவிடாமல், கிருஷ்ணரின் வாழ்க்கையை நடனத்தோடு கதையை சொல்ல ஆரம்பித்தார். அதுதான் கிருஷ்ணன் ஆட்டம் என்ற பெயரில் உருவானது. சமோரினிடம், தம்புரான்  கிருஷ்ணன் ஆட்டம் வந்த கதைகளைப் பற்றி கேட்டதோடு மட்டுமல்லாமல், அந்த நடனக் குழுவை அப்படியே கேரளத்திற்கு அழைத்து வர திட்டமிட்டார்.
இது சம்பந்தமாக சமோரினிடம் போய் கேட்டிருக்கிறார். ‘கேரளத்தில் இந்த நடனத்தை பிரபலப்படுத்த வேண்டும். கிருஷ்ணனின் வாழ்க்கை சரித்திரத்தை பட்டித்தொட்டியெல்லாம் கேரளத்து மக்களும் தெரிந்துகொள்ள வேண்டும். அதற்கு நீங்கள் கேரளத்திற்கு வந்து , எங்கள் சமஸ்தானத்தில் தங்கியிருந்து கிருஷ்ணன் ஆட்டத்தை பிரபலப்படுத்த வேண்டும்” என்று கேட்டுக்கொண்டார். ஒரு மகாராஜா தன்னிடம் வந்து இப்படி கேட்டதற்கு சமோரினுக்கு பெருத்த மகிழ்ச்சிதான். ஆனால், அப்போது கேரளத்திற்கும், கல்கத்தாவிற்கும் இடையே உள்ள அரசியல் சூழ்நிலைகள் சரியில்லாத காரணத்தால், சமோரின் நடனக் குழுவை தம்புரானால் உடனடியாக கேரளத்திற்கு அழைத்துச் செல்ல முடியவில்லை.
கேரளத்திற்கு வந்த பிறகும் தம்புரானால், மனம் கிருஷ்ணன் ஆட்டத்தை விட்டு வெளிவரவில்லை. எப்படியாவாது அதேபோன்றதொரு ஒரு நாட்டிய நாடகத்தை கேரளத்திலும் உருவாக்கிவிட வேண்டும் என்று கங்கணம் கட்டிக்கொண்டு சில நாட்டியக் கலைஞர்களை வைத்து ராமன் ஆட்டம் எனும் புது வகை நாட்டியத்தை உருவாக்கினார். கிருஷ்ணன் ஆட்டம் முழுக்க முழுக்க சமஸ்கிருதத்தில் எழுதப்பட்டது. ஆனால், ராமன் ஆட்டத்தின் முழு கதையும் மலையாளத்தில் உருவாக்கப்பட்டது. முதல் பகுதி முழுவதையும் தம்புரானே எழுதினார். ராமன் ஆட்டம் உருவாக்கியதில் தம்புரானுக்கு மட்டற்ற மகிழ்ச்சி.  ராமன் ஆட்டம் கொஞ்சம் கொஞ்சமாக பிரபலமடைய ஆரம்பித்தது. ராமன் ஆட்டத்திற்கு பல்வேறு எழுத்தாளர்கள் கதை எழுத ஆரம்பித்தார்கள்.  ராமன் ஆட்டம் நாடகத்தில் முக்கிய கதாபாத்திரங்களை உருவாக்கிய பெருமை எழுத்தாளர் இறையம்மன் தம்பியையே சாரும். காலங்கள் ஓட ஆரம்பித்தன . ராமன் ஆட்டம் எனும் நாட்டிய நாடகம் ஆட்டகதா என்ற பெயரில் (ஆட்டத்துடன் கதை கூறுவது என்று பொருள்) அந்த நாட்டியம் மெருகேற தோன்றியது. இந்த நடனத்தை மேலும் மெருகேற்றவும் நாட்டிய நாடகத்தை ஊரெங்கும் பரப்ப பெரிதும் பாடுபட்ட பெருமை 19 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் திருவாங்கூர் சமஸ்தானத்தை ஆண்ட மகராஜாவா ஸ்வாதி திருநாள் ராம வர்மாவையே சேரும்.
தம்புரான் உருவாக்கிய ராமன் ஆட்டம், ஆட்டகதா நாட்டிய நாடகம்தான் கதகளியாக மாறியது.  17 ஆம் நூற்றாண்டு நாட்டிய நாடகமான இன்றிருக்கும் கதகளியில் கடவுள்தான் கதாநாயகர்கள்.  நடிப்பு, நடனம், அபிநயம், இசை, வாத்தியம் வாசித்தல் எனும் ஐந்துக் கலைகளை உள்ளடக்கியதுதான் கதகளி. இந்த ஐந்து கலைகளையும் தெரிந்த ஒருவரால் மட்டும்தான் கதகளியை திறம்பட ஆட முடியும் என்பது கதகளியின் கூடுதல் சிறப்பு. கதகளியில் கிட்டத்தட்ட 101 கதைகள் சொல்லப்பட்டாலும், முக்கியமாக பெரும்பாலான மேடைகளில் ராமாயணம் மற்றும் மகாபாரத கதைகள் மட்டுமே சொல்லப்பட்டு வருகிறது. ஊடகங்கள் பெருகாத அந்தக் காலக்கட்டத்தில், கேரளத்தில் கதகளி விடிய விடிய மக்கள் பார்த்து ரசிப்பார்களாம். ஆனால், தற்போது ஊடகங்கள் பெருகி இருந்தாலும், கதகளியின் ரசிப்புத் தன்மை மட்டும் இன்னும் கேரளத்து மக்களிடையே குறையவில்லை என்பது கூடுதல் சிறப்பு. ஆனால், கதகளி அரங்கேற்றம் மட்டும் இரவில் இரண்டில் இருந்து நான்கு மணி நேரம் மட்டுமே நடைபெறுகிறது.
கதகளி நாட்டிய நாடகம் பற்றிய ஆராய்ச்சி கேரளத்தில் இன்னும் தொடர்ந்துகொண்டுதான் இருக்கிறது. கதகளியில் கதாபாத்திரங்கள் அணிந்துவரும் நகைகள், புறத்தோற்றம், முகபாவங்களை வெளிக்காட்டுதல், நடன அசைவுகள் இவைகள் எல்லாம் தம்புரான் மகாராஜா 15 ஆம் நூற்றாண்டில் கேரள மாநிலத்தில் உள்ள மட்டஞ்சேரி பகுதி கோயிலில் உள்ள சிற்பங்களின் அடிப்படையாக வைத்து நடனத்தை அமைத்திருக்கலாம் என்றும் ஆராய்ச்சியாளர்கள் கூறுகிறார்கள்.
ஊடகங்கள் இல்லாத காலகட்டத்தில் புராணக்கதைகளை  நாட்டியம், நடனம், இசை, அலங்காரத்துடன் அட்டகாசமாக பட்டிதொட்டியெல்லாம் பரப்பியதோடு, தங்கள் மொழியின் உச்சரிப்பையும், தங்கள் மாநில கலாசாரத்தை மக்கள் மத்தியில் பரப்பிய கதகளி, இன்னும் பல நூற்றாண்டுகள் கேரத்தின் பெருமையை பறைசாற்றும் என்பதில் மட்டும் சந்தேகமே இல்லை.

போர்க்களத்தில் பிறந்த வில்லுப்பாட்டு!


ஒவ்வொரு மாநிலத்தையும்.. ஏன் ஒவ்வொரு நாட்டையும் தனியாக அடையாளப்படுத்த இசை, நடனம், ஓவியம், பேச்சு, உடை, கட்டடம் என்று ஒவ்வொன்றும் கருவியாய் இருக்கிறது. இதை யாரும் மறுப்பதற்கில்லை. அதேபோல் தமிழகத்தின் தென் மாவட்டங்கள் குறிப்பாக திருநெல்வேலி, கன்னியாகுமரி மற்றும் தூத்துக்குடி, விருதுநகர் மாவட்டகள் தவிர்த்து, கிழக்கு கேரளம் வரை மக்கள் வாழ்வியலோடு கலந்த ஒரு விஷயம்தான் வில்லுப்பாட்டு.
வில்லுப்பாட்டு என்பது இசையோடு புராணங்கள், பக்தியை சொல்லும் இசை நிகழ்ச்சி என்றுதான் எல்லாருக்கும் தெரியும். ஆனால், வரலாற்றில் வில்லுப்பாட்டுக்கு தனியொரு இடம் உண்டு. இந்தத் தலைமுறையினர் வரை ஓரளவிற்கு அனைவரும் தெரிந்து வைத்திருக்கும் வில்லுப்பாட்டு, நாகரிக வளர்ச்சி, ஊடகங்கள் பெருக்கங்களினால் அடுத்த தலைமுறை தெரிந்துகொள்ள முடியாத அழிவுறும் விளிம்பு நிலைக்கு  வில்லுப்பாட்டு என்ற ஒரு கலை தள்ளப்பட்டுவிடுமோ அச்சம் நம்மிடம் தொற்றிக்கொள்வதை தவிர்க்க முடியவில்லை.
தென் தமிழக மாவட்டங்களில் சிறு தெய்வ வழிபாட்டுக்கு மக்கள் அதிக முக்கியத்துவம் அளித்து வருவது எல்லோரும் அறிந்ததே. பெரும்பாலும் ஏப்ரல் மே மாதங்களில்தான் சிறு தெய்வங்களை வழிபடும் திருவிழாக்கள் அதிக அளவில் தென் மாவட்டங்களில் ஊருக்கு ஊர் நடைபெறும். இந்த திருவிழாக் காலங்களில் ஒவ்வொரு சிறுதெய்வ கோயில்களிலும் வில்லுப்பாட்டு நிகழ்ச்சிக்கு என்று தனியொரு இடம் உண்டு. ஒவ்வொரு கோயிலிலும் சிறு தெய்வங்களுக்கு பூஜைகள் இரவு 7 மணியில் ஆரம்பித்து 8 மணிக்கு முடிந்துவிடும். அதையடுத்து நடு இரவு ஒரு மணிக்கு சாமி காடு செல்லும் சடங்கு நடைபெறும். அதையொட்டி நடுநிசி பூஜைகள் நடைபெறும். இந்த பூஜையை பார்க்க பக்தர்கள் விழித்து இருப்பதற்காக, சிறு தெய்வ சிலைக்கு நேர் எதிராக அமைக்கப்பட்டிருக்கும் மேடையில் வில்லுப்பாட்டுக் கலைஞர்கள் சிறு தெய்வகளின் புராணக் கதைகளை கூறுவார்கள். தமிழர்களின் பண்பாடு, உணவு பழக்க வழக்கங்கள், உறவு முறை எல்லாமே இந்தக் கதையோடு ஒட்டி நகைச்சுவை கலந்து மெட்டு இசைத்துப் பாடுவார்கள் வில்லுப்பாட்டு கலைஞர்கள்.
இன்று கோயில்களிலும் திருவிழாக்களிலும் காணும் வில்லுப்பாட்டு வந்த கதை கொஞ்சம் சுவராஸ்யமானது. கிட்டத்தட்ட இரண்டாம் நூற்றாண்டு காலம் அது. மனிதர்கள் விலங்குகளை வேட்டையாடி உணவாக உட்கொண்ட காலம். விலங்குகளை வேட்டையாட அந்தக் காலக்கட்டத்தில் மனிதன் வில் போன்ற ஆயுதத்தையே பயன்படுத்தினான். தான் தேடிச்சென்ற விலங்கு கிடைக்காதபோதும், வேட்டை சரியாக அமையாதபோதும், தங்கள்  சோர்வு தெரியாமல் இருக்க, வில்லை கவிழ்த்தி, காய்ந்த சருகுகளை ஓட்டையிட்டு அதை வில்லின் நாணில் கோர்த்து, கைகளை நாணில் தட்டி இசைப்பார்களாம். வில்லுப்பாட்டு முதன் முதலில் அரங்கேறியது நடுக்காட்டில் விலங்குகளை வேட்டையாடியபோதுதான்.
காலங்கள் உருண்டோடியது. விலங்குகளை வேட்டையாடுவதற்கு மட்டுமே பயன்பட்டு வந்த வில், போர் ஆயுதமாக உருவெடுத்தது. போர் வீரர்கள் போர்க்களத்தில் சோர்ந்து போய் நின்றுகொண்டிருக்கும்போது, ஏதேனும் ஓர் போர் வீரன் வில்லை தலைகீழாய் கவிழ்த்தி அதில் மணிகளை கோர்த்து, போர் வீரர்களின் சோர்வை நீக்கவும், தன்னம்பிக்கை அதிகரிக்கும் வகையிலும், தங்கள் சாகசங்களையும், தங்கள் மூதாதையர்களின் போர்த்திறமைகளையும், போரில் வெற்றிபெற்ற கதைகளையும் உரக்க  சப்தமிட்டு பாடுவார்களாம். இந்த வீர எழுச்சிப் பாட்டைக் கேட்டும் ஒவ்வொரு வீரருக்கும் வீரம் கொப்பளிக்குமாம். சோர்வை விரட்டி, போரில் சண்டையிடுவார்கள் என்கிறது வரலாற்று ஆய்வேடு.  எந்த இலக்கணத்திற்கும் உட்படாமல், குரலும், மனமும் போன போக்கில் உக்கிரமான மகிழ்ச்சியை அள்ளித்தரும் விஷயமாகத்தான் வில்லுப்பாட்டின் முதற்படி அமைந்தது.
15 ஆம் நூற்றாண்டின் காலத்தில் அரசர்களின் புகழ் பாட அரசவையில் அருதக்குட்டி எனும் புலவரால் வில்லுப்பாட்டுக்கு இலக்கணம் அமைக்கப்பட்டதாக வரலாறு கூறுகிறது. ஆனால், புலவரின் பெயர் குறித்த சர்ச்சையும் வரலாற்று ஆய்வாளர்களிடம் இருக்கத்தான் செய்கிறது. ஆனால் எந்த வரலாற்று ஆய்வாளர்களும், 15 ஆம் நூற்றாண்டில் வில்லுப்பாட்டக்கு இலக்கணம் வரையறுக்கப்பட்டதை யாரும் மறுக்கவில்லை. வில்லுப்பாட்டு ஒரு வடிவத்திற்கு வர ஆரம்பித்தது. கி.பி. 1550 ஆம் ஆண்டிற்கு பிற்பகுதியில்தான்.
 வில்லுப்பாட்டு, வில்லடி, வில்லு, வில்லடிச்சான் பாட்டு என பல்வேறு பெயர்களில் அழைக்கப்படும் வில்லுப்பாட்டின் முக்கிய அங்கமாக விழங்கும் வில்லானது ஆரம்ப காலக்கட்டத்தில் முற்றிலும் பனை மரத்தாலேயே செய்யப்பட்டது. வேறு வேறு மரங்களில்  வில் செய்ய முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டாலும், பனை மரத்தில் செய்யப்பட்ட வில்லில் இருந்து கிடைக்கும் இசையின் நயம், மற்ற மரங்களில் அமைக்கப்பட்ட வில்லில் கிடைக்கவில்லையாம்.  நடுவில் தடிமனாகவும், இரண்டு ஓரத்தில் மெலிந்தும் காணப்படும் இந்த வில்லின் ஓரங்களில் நாண் ஏற்றப்பட்டு, மணிகள் தொங்கவிடப்பட்டு இசைக்கப்படுகிறது. இந்த வில்லுடன், கடம், ஜால்ரா போன்றவை பக்க வாத்தியமாக இருந்தாலும், பாடுபவரின் குரலை உச்சஸ்தாயிலுக்கு கொண்டு சென்று மேடையை தெய்வீகமயமாக்கியது உடுக்கை என்ற இசைக்கருவிதான். ஆனால், தற்போது அரங்கேற்றப்படும் வில்லுப்பாட்டில் உடுக்கை பயன்படுத்துவது இல்லை மாறாக தபேலா, ஆர்மோனியம், பம்பை போன்ற இசைக்கருவிகள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.
வில்லுப்பாட்டில் ஆறு இசைக்கலைஞர்கள் இருப்பார்கள். இதில் ஒருவர் நகைச்சுவை கேள்விகளை கேட்டுக்கொண்டே இருப்பார்? ஒருவர் ஆமாம் என்று சொல்லிக்கொண்டே சிலேடை கேள்விகளை கேட்பார். மற்றவர்கள் இசைக்கருவிகளை இசைக்க ஒருவர் முக்கியக் கதையை பாட்டோடு இசைத்து பாடுவார். மன்னர்களின் வரலாறு, புராணக்கதைகள், சிறு தெய்வ வரலாறு என்பது மட்டுமே முன்னர் வில்லுப்பாட்டுக்கு பாடு பொருளாக இருந்தது. ஆனால், தற்போது காலத்திற்கு தகுந்தவாறு வில்லுப்பாட்டில் அறிவியல் விஷயங்களும் பாடுபொருளாக மாறியுள்ளது குறிப்பிடத்தக்கது.
வரையறுக்கப்பட்ட மெட்டுக்கள் கிடையாது; குரலில் இனிமை வேண்டும் என்ற கட்டுப்பாட்டும் கிடையாது; இசையை முறைப்படி கற்றுக்கொண்டிருக்க வேண்டும் என்ற அவசியமும் இல்லை. இப்படி இசைக்கே உண்டான அத்தனை முக்கிய அம்சங்களையும் புரந்தள்ளிவிட்டு, பார்ப்பவர்களின் எண்ணங்களை தூண்டி, கலாசாரத்தை வளர்க்க உதவியாய் அமைந்ததுதான் வில்லுப்பாட்டு. இன்றளவேணும் தென் மாவட்ட மக்களின் மனதில் நீக்கமற நிறைந்துகிடக்கும், வாழ்வியலையும், பண்பாட்டையும் இசையோடு பேசு மொழியில் மனதில் பதியவைத்த இந்த வில்லுப்பாட்டு தமிழர்களின் கலாசார அடையாளங்களில் ஒன்றுதானே!

Friday, 31 August 2012

அணுவுலை அரசு பயங்கரவாதம்..!


கூடங்குளம் அணுமின் நிலையத்திற்கு எதிரான போராட்டம் மீண்டும் வலுவடைந்து வருவது எதை காட்டுகிறது?

    லகிலேயே மனித உயிர்களை மிக மலிவான பொருளாக கருதுவது ஒருவேளை இந்தியாவில் மட்டும் தானோ? என்ற எண்ணம் நமக்கு அடிக்கடி வந்துவிடுகிறது. ஒருபகுதி மக்கள் தங்களது வாழ்வின் ஆதரங்களுக்காகவும் வாழ்வுக்காகவும் தொடர்ந்து போராடுகிறார்கள் தங்களது எதிர்ப்பை காட்ட நியாயமான வழிமுறைகள் எவைகளெல்லாம் உண்டோ அவைகளை நாடுகிறார்கள் ஆனால் அவர்கள் தட்டுகின்ற கதவுகள் எதுவும் அவர்களுக்காக திறக்கப்பட வில்லை மாறாக அவர்கள் முகத்தில் இரக்கமே இல்லாமல் அடிதான் விழுகிறது.

அரசாங்க நிர்வாகத்தின் அனைத்து இயந்திரங்களும் அந்த மக்களின் உண்மையான பிரச்சனையை மனசாட்சியோடு பார்க்க மறுக்கிறது. கண்முன்னால் தெரிவது பேரழிவு மட்டுமே என்றாலும் அதை நான் பார்க்க மாட்டேன் அதை பற்றி கவலைப்பட மாட்டேன் என்ற வகையில் தான் நிர்வாகங்கள் நடந்து வருகிறது. தங்களை பற்றி சிறிது கூட கவலைபடாத அரசு இயந்திரத்தை நோக்கி மக்கள் போராடத்தான் முடியும்.


ணுமின் நிலையத்தால் மின்சாரம் கிடைக்கிறது அது நாட்டு வளர்ச்சிக்கு நல்லது தானே? அதை ஏன் எதிர்க்க வேண்டும்? வேண்டாம் என்று மறுக்க வேண்டும்?

     மின்சாரத்தால் நாட்டுக்கு நல்ல வளர்ச்சி இருக்கிறது என்பது உண்மை தான் இன்றைய நிலையில் மின்சாரம் என்பது இல்லா விட்டால் சுவாசிக்க காற்று இல்லாமல் உயிர்கள் எப்படி மறித்து போகுமோ அதை போலவே மின்சாரம் இல்லாமல் வளர்ச்சியும் நின்று போகும் ஆனால் அந்த மின்சாரத்தை பெறுவதற்கு அணுவுலை மட்டும் தான் ஒரே வழி என்பதை ஏற்றுகொள்ள முடியாது.

சர்வதேச அளவில் எந்த நாட்டிலும் முழுமையான மின்சார தேவையை அணுவுலைகள் பூர்த்தி செய்ய வில்லை செய்யவும் முடியாது. கூடங்குளம் அணுவுலையில் இருந்து பெறப்போவதாக சொல்லப்படும் மின்சாரத்தின் அளவு குறைந்த பட்சம் தமிழ்நாட்டு மின்சார தேவையை கூட பூர்த்தி செய்யாது.

அணு மின்சாரத்தால் ஆக்கபூர்வமான விளைவுகளை விட அழிவுகளே அதிகம் என சொல்லலாம். மனித தவறாலோ இயந்திர கோளாறாலோ இயற்க்கை சீற்றத்தாலோ ஒரு சிறிய விபத்து ஏற்பட்டால் கூட அதன் விளைவுகள். மிக மோசமானதாக இருக்கும். அணுகுண்டுகள் வினாடி நேரத்தில் பல உயிர்களை காவுகொள்ளும் என்றால் அணுவுலை நின்று நிதானமாக பல உயிர்களை பறித்து விடும். பலரை நிவாரணம் செய்ய முடியாத அளவிற்கு பாதிப்படைய செய்து விடும். அதனால் மட்டுமே அணுமின்சாரம் வேண்டாம் என்று இயற்க்கை ஆர்வலர்கள் சொல்கிறார்கள்.

விபத்து ஆபத்து எல்லா துறையிலுமே இருக்கிறது. சாதாரணாக சைக்கிளில் சென்றால் கூட ஆபத்து இருக்கிறது. ஆபத்தை மட்டுமே பார்த்தால் வளர்ச்சியை எப்படி அடைய இயலும்.

ஒரு ரயில் விபத்திற்கும் அணுவுலை விபத்திற்கும் நிறைய வித்தியாசம் இருக்கிறது. அணுவுலையில் விபத்து ஏற்பட்டால் அதிலிருந்து வரும் கதிர்வீச்சி சம்மந்தப்பட்ட நிலபகுதியோடு நின்றுவிடாது கதிர்கள் காற்றின் மூலமாக பயணப்பட்டு பல பகுதிகளை சூன்ய பிரதேசமாக மாற்றிவிடும். அந்த பகுதியில் பல நூற்றாண்டுகள் எந்த உயிர்களும் வாழ முடியாத நிலை உருவாகி விடும்.


ப்துல்கலாம் போன்ற விஞ்ஞானிகள் இந்த அணுவுலையால் எந்த அபாயமும் ஏற்படாது என்று சொல்கிறார்களே பிறகு எதற்க்காக பயப்பட வேண்டும்?

       ரு சினிமாகாரனிடம் போய் திரைப்படங்கள் எடுக்கபடுவது நிறுத்தப்பட்டு விட்டால் என்ன நிகழும் என்று கேட்டால் உலகமே அழிந்து விடும் என்று பதில் சொல்வான் காரணம் அவனுக்கு சினிமா மட்டுமே தெரியும் அவற்றால் ஏற்படும் சமூக விளைவுகளை பற்றி அதிகம் தெரியாது. அப்துல்கலாம் அவர்களின் கூற்றை இந்த வகையில் நம்மால் எடுத்துகொள்ள இயலாது காரணம் அவருக்கு அணுகசிவால் ஏற்படும் பாதிப்புகள் எப்படி இருக்குமென்று நம்மைவிட அதிகமாக தெரியும். ஆனாலும் அவர் ஒரு சாதாரண சினிமாக்காரனை போல் மக்களை மயக்குவதற்காக பேசுகிறார். இது நமது நாட்டின் மிகபெரிய துரதிஷ்டம்.


ப்படியென்றால் அணுவுலை எதிர்ப்பாளர்கள் மட்டும் தான் மக்களுக்கு துயரம் வரக்கூடாது என்று நினைக்கிறாகள் மற்றவர்கள் அனைவரும் மக்கள் எக்கேடு கெட்டாலும் பரவாயில்லை என்று நினைக்கிறார்கள் என்று நீங்கள் சொல்கிறீர்களா?

     ப்படி நான் கூற வேண்டாம் என்று தான் விரும்புகிறேன். ஆனால் இந்த விஷயத்தின் நடைமுறையை பார்க்கும் போது அப்படி கூறவேண்டிய நிலை வந்துவிடுமோ என்று அச்சபடுகிறேன். காரணம் காங்கிரஸ் கட்சி ராஜீவ் காந்தி கொண்டுவந்த திட்டம் அதை மாற்ற கூடாது என்று நினைக்கிறார்கள் பாஜக இந்த போராட்டத்தில் கிருஸ்தவர்கள் அதிகமாக இருக்கிறார்கள் அதில் நாம் நியாயத்தை பேச வேண்டாம். என்று கருதுகிறார்கள் திமுக அதிமுக போன்ற மாநில கட்சிகளுக்கு அணுவுலையால் ஏற்படும் மக்கள் பாதிப்பை விட டெல்லி அரசாங்கத்திற்கு விசுவாசமாக நடந்து கொள்வதே மிக சிறந்தது என்று தோன்றுகிறது. அதனாலேயே அவர்கள் நடக்கும் காரியம் அநியாயம் என்பதை நன்றாக தெரிந்திருந்தும் சுயநலத்தால் கைகட்டி வேடிக்கை பார்க்கிறார்கள்.

தமிழக அரசாங்கம் இந்த விஷயத்தை மிக கவனமாக பரிசிலித்து செயல்பட வேண்டும் காரணம் அணுவுலை எதிர்பாளர்களுக்கு பெரிய கட்சிகளின் ஆதரவு இல்லை என்றவுடன் பல சிறிய தமிழ் தேசிய பிரிவினை வாத அமைப்புகள் ஆதரவு கொடுக்கின்றன. போராட்ட களத்தில் மிக முக்கிய பங்கு பணியாற்றும் மீனவ மக்களை இந்த அமைப்புகள் தங்களது சுயலாபத்திற்காக பயன்படுத்த துவங்கினால் வருங்காலத்தில் தென்தமிழகத்தில் மிகபெரிய வன்முறை சம்பவங்கள் நிகழலாம் எனவே வரக்கூடியதை முன்கூட்டியே அறிந்து அதற்கு ஏற்றார் போல் நடந்து கொள்ள வேண்டும்.



ப்படி என்றால் கூடங்குளத்தில் அணுவுலை வேண்டாம் என்கிறீர்களா?

  கூடங்குளத்தில் மட்டுமல்ல உலகில் எந்த மூலையிலுமே அணுவுலை என்பது தேவையில்லை பயங்கரவாதத்தை எப்படி மனித சமூகம் வெறுத்து ஒதுக்குகிறதோ? அதே போலவே அணுவுலைகளை வெறுத்து ஒதுக்க வேண்டும்.

அணுவுலை என்பது உலகிற்கு மிகபெரிய அச்சுறுத்தல்.!

Sunday, 26 August 2012

தமிழர் வரலாறு கி.மு 14 பில்லியன் முதல் - கி.மு. 1 வரை


கி.மு 14 பில்லியன்
பெரும் வெடியில் உலகம் தோன்றியது.
கி.மு 6 - 4 பில்லியன்
பூமியின் தோற்றம்.
கி.மு. 2.5 பில்லியன்
நிலத்தில் பாறைகள் தோன்றிய காலம். முதன் முதலில் தமிழ் நாட்டில் மனித இனம் தோன்றியது. தென் குமரிக்குத் தெற்கே இலெமூரியா கண்டத்தில் முதலில் மனித இனம் தோன்றியது.
கி.மு. 470000
இக்கால இந்தியாவின் தமிழ் நாடு, பஞ்சாப் ஆகிய இடங்களில் மனித இனம் சுற்றித் திரிந்தது.
கி.மு. 360000
முதன் முதலாக சைனாவில் யோமோ எரக்டசு நெருப்பை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.
கி.மு. 300000
யோமோ மனிதர்கள் ஆசியாவிலும் ஆப்பிரிக்காவிலும் சுற்றித் திரிந்தனர்.
கி.மு. 100000

 
நியாண்டெர்தல் மனிதன்
கிழக்கு ஆப்பிரிக்காவில் தற்கால மனிதனின் மூளை அளவு உள்ள மனிதர்கள் வாழ்ந்தனர்.
கி.மு. 75000
கடைசி பனிக்காலம.். உலக மக்கட் தொகை 1.7 மில்லியன்.
கி.மு. 50000
தமிழ்மொழியின் தோற்றம்.
கி.மு. 50000 - 35000
தமிழிலிருந்து சீன மொழிக் குடும்பம் பிரிவு.
கி.மு. 35000 - 20000
ஆஸ்திரேலிய, ஆப்பிரிக்க சிந்திய மொழிகள் தமிழிலிருந்து பிரிந்ந காலம்.
கி-மு. 20000 - 10000
ஒளியர் கிளைமொழிகள் தமிழிலிருந்து பிரிந்தகாலம் ( இந்தோ ஐரோப்பிய மொழிகள் )
கி-மு. 10527
முதல் தமிழ்ச்சங்கத்தை பாண்டிய மன்னன் காய்கினவழுதி தோற்றுவித்த காலம். 4449 புலவர்கள் கூடினர். முதுநாரை, முதுகுருகு, களரியாவிரை முதலிய நூல்கள் இயற்றப்பட்டன.
கி.மு. 10527 - 6100
பாண்டிய மன்னர்கள் காய்கினவழுதி வடிவம்பலம்ப நின்ற நெடியோன், முந்நீர்ப் விழவின் நெடியோன்,  நிலந்தரு திருவிற் பாண்டியன் செங்கோன், பாண்டியன் கடுங்கோன்.
கி.மு. 10000
கடைகி பனிக்காலம் முற்றுப்பெற்றது. உலக மக்சுள் தொகை 4 மில்லியன். குமரிக்கணடம் தமிழர் 100000.
கி.மு. 6087
கடல் கொந்தளிப்பில் குமரிக் கண்டம் மூழ்கியது.
கி.மு 6000 - 3000
கபாடபுரத்தைத் தலைநகரமாகக் கொண்டவன் பாண்டிய மன்னன் வெண்தேர் செழியன். இரண்டாம் தமிழ்ச்சங்கத்தை நிறுவினான். 3700 புலவர்கள் இருந்தனர். அகத்தியம், தொல்காப்பியம் முதலிய இலக்கண நூல்கள் எழுந்தன. பாண்டிய மன்னர்கள் செம்பியன் மந்தாதன், மனுச்சோழன், தூங்கெயில் எறிந்த தொடிதோட் செம்பியன் அதியஞ்சேரல், சோழன் வளிதொழிலாண்ட உரவோன், தென்பாலி நாடன் ராகன், பாண்டியன் வாரணன், ஒடக்கோன், முட்டதுத் திருமாறன் ஆண்டகாலம்.
கி.மு. 5000
உலக மக்கள் தொகை 5 மில்லியன். சிந்து சமவெளி நாகரிகம் தொடக்கம். முகஞ்சதாரோ, ஹரப்பா.
கி.மு. 4000
சிந்து சமவெளி மக்கட் தொகை 1 மில்லியன்.
கி.மு - 4000
கிருத்துவ உலக நாட்குறிப்பு ஆரம்பம். சுமேரியாவில் புதை பொருளாராய்ச்சி சிந்து சமவெளி வணிகப் பொருள் கண்டது.
கி.மு - 3200
சிந்து சமவெளியினர் 27 விண்மீன்கள் இடைத்தொடர்பு நோக்கி சூரிய, சந்திரனின் முழு மறை வடிவங்கள் நிலைபபாடு கண்டனர்.
கி.மு - 3113
அமெரிக்க- தமிழினத்தவராகிய மாயர்கள் தொடங்கிய மாயன் ஆண்டுக் கணக்கு ஆரம்பம்.
கி.மு - 3102
சிந்து சமவெளிக் தமிழர்களின் "கலியாண்டு" ஆண்டு தொடக்கம், சிந்து சமவெளியில் தமிழர்களின் நாகரிகம் தழைத் தொடங்கியது.

மண்டையோட்டு வடிவங்களின் வகைகள்
இடமிருந்து வலம்: நெடுமண்டை நீள்வட்ட வடிவம்; இரண்டு குட்டைமண்டை வடிவங்கள்- நீளுருண்டை வடிவமும் ஆப்பு வடிவமும்; நடுமண்டை ஐங்கோண வடிவம்.

 

கி.மு - 3100 - 3000
ஆரியர்கள் சிந்து சமவெளி வழி நுழைந்தனர். துணி நெய்தல் ஐரோப்பா சிந்து சமவெளியில் ஆரம்பித்தது. தென்னிந்தியாவில் குதிரைகள் இருந்தது. சைவ ஆகமங்கள் முதல் தமிழ்ச் சங்க காலத்தில் பொறிக்கப்பட்டன.
கி.மு - 2600
எகிப்திய பிரமிடுகள் வேலை ஆரம்பம்.
கி.மு - 2387
இரண்டாம் கடல் கொந்தளிப்பால் கபாடபுரம் அழிந்தது. ஈழம் பெருநிலப் பகுதியிலிருந்து பிரிந்தது.
கி.மு - 2000 - 1000
காந்தாரத்தில் இருந்த ஆரியர்களுடன் வடபுலத் தமிழ் மன்னர்களும் சிந்து வெளி தமிழர்களும் போர் புரிந்த காலம். கடற்பயணங்களில் புதியன கண்டுபிடித்த சேர இளவரசர்கள் ஈழத்தில் ஆண்டகாலம். கங்கைவெளி - சிபி மரபினர் ஆட்சி. சிந்து வெளி - சம்பரன் ஆட்சி.
கி.மு - 1915
திருப்பரங்குன்றத்தில் மூன்றாம் தமிழ்ச் சங்கம் நடந்தது.
கி.மு. - 1900
வேத கால முடிவு. சரசுவதி ஆறு வற்றியதினால் மக்கள் தொகை கங்கை ஆறு நோக்கி நகர்ந்தது.
கி.மு. 1500
முக்காலத்து பிராமி மொழி வழக்கத்தில் இருந்த துவாரக நகர் வெள்ளத்தில் மூழ்கியது. இரும்பின் உபயோகம். கிராம்பு சேர நாட்டிலிருத்து மத்திய கிழக்கு நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டது.
கி.மு. - 1450
உபநிசத்துக்களும் வேதங்களும் உண்டாக்கப்பட்டன.
கி.மு. - 1316
மகாபாரத கதை வசிஸ்டரால் அமைக்கப் பட்டது.

கி. மு. 1250
மோசஸ் 600,000 யூதர்களை எகிப்திலிருந்து வெளியேற்றினார்.
கி. மு . 1200
ஓமரின் இல்லயாய்டு, ஓடசி பாடல்கள் மேற்கோற்படி கிரேக்க துரோசன் சண்டை.
கி. மு. 1000
உலக மக்கள் தொகை 50 மில்லியன்.
கி. மு. 1000-600
வடக்கில் சிபி மரபினர், தெற்கில் திங்கள் மரபினர் ஆட்சி நிலவியது.
கி. மு. 950
அரசன் சாலமன் வர்த்தகக் கப்பலில் யூதர்கள் இக்காலத்து கூறப்படும் இந்தியா வருகை.
கி. மு. 950
வடமொழி முழு வளர்ச்சியடையாது பேச்சு மொழி உருவெடுத்தக் காலம்.
கி. மு. 925
யூதர்களின் அரசன் தாவிது இப்போதைய இசுரேல், லெபனானை பேரரசாகக் கொண்டிருந்தான்.
கி. மு. 900
இப்போதைய இந்தியாவில் இரும்பின் உபயோகம்.
கி. மு. 850பின்
இபபோதைய இந்தியாவின் பொதுவான மொழி தமிழ், வடமொழி, (வடதமிழ், தென்தமிழ்) என மொழிகள் உருவாயின. வடபுலத்தில் பிராமி எனவும் தென்புலத்தில் தமிழி எனவும் பெயர்பெற்றன. பிராமிக்கும், தமிழுக்கும் எழுத்திலக்கண ஒற்றுமை உண்டு. வடமொழி பாகதமாகவும், தென்மொழி தமிழாகவும் பெயற்பெற்றன. (சமசுகிருதம் வடமொழி அல்ல. காரணம் அது போதுமான வளர்ச்சி அடைந்திருக்கவில்லை.) தொல்காப்பியம்- பிராகிருதப் பிரகாசா இலக்கண நூற்கள் எழுதப்பட்டன, கடைச் சங்க காலத்தில் நற்றினை, குறுந்தொகை, அகநானூறு, புறநானூறு, கலித்தொகை, பதிற்றுப்பத்து, பரிபாடல், பத்துபாட்டு, எட்டுத்தொகை, பதினெண்கீழ்க்கணக்கு நூல்கள், திருமுருகாற்றுப்படை, சிறுபாணாற்றுப்படை, பெரும்பாணாற்றுப்படை, பொருநராற்றுப்படை, கூத்தராற்றுப்படை, மருதக்காஞ்சி, முல்லைப்பட்டு, குறிஞ்சிப்பாட்டு, பட்டினப்பாலை, நெடுநல்வாடை, முதலிய நூல்கள் தோன்றின. திருக்குறள் தலையாய நூல், பின்னர் சங்க கால முடிவுக்குப் பின் சிலப்பதிகாரம், மணிமேகலை, சீவகசிந்தாமணி, வளையாபதி, குண்டலகேசி முதலிய ஐம்பெரும்காப்பியங்களும், முதுமொழிக்காஞ்சி, களவழி நாற்பது, கார்நாற்பது, நாலடியார் திரிகடுகம், நான்மணிக்கடிகை, சிறுபஞ்ச மூலம், ஏலாதி, ஆசாரக்கோவை, பழமொழி நானூறு, இன்னா நாற்பது, இனியவை நாற்பது, முத்தொள்ளாயிரம் முதலிய நூல்களும் தோன்றின.
கி. மு. 776
கிரேக்கத்தில் (கிரிஸ்) முதல் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டி.
      
குழந்தைகள் குகையில் கண்டு எடுக்கப்பட்ட மண்டையோடு. மென்டோனா, இத்தாலி.   பித்திக்காந்திரோப் பஸ் 1 யின் மண்டையோடு. (தூபுவா 1891ல் கண்டு எடுத்தது)   சீனாந்திரோப்பஸின் மண்டையோடு (மீட்டமைப்பு: கெராஸிமவ்)

கி. மு. 750
பிராகிருத மொழி மக்கள் மொழியாக ஆரம்பித்தது.
கி. மு. 700
சொரோஸ்டிரேணியிசம் பெர்சியாவில் சொரோஸ்டரால் துவக்கப்பட்டது, இவருடைய மதப்புத்தகம் செண்டு அவெசுடா.
கி. மு. 623- 543
கெளதம புத்தர் காலம், தற்போதைய உத்திரப்பிரதேசத்தில் பிறந்தார்.
கி. மு. 600
லாவோ - துசு காலம். துவோசிசம் சைனாவில் புழக்கம், எளிமை, தன்னலமின்மை சீனர்கள் வாழ்வானது.
கி. மு. 600
கோதடிபுத்தர் அறிந்த மொழிகளில் தமிழும் ஒன்று, கி.மு. நான்கு, ஐந்து, ஆறாம், நூற்றாண்டுகளில் குறிப்பிடத்தக்க மன்னர்கள் இளைஞன் கரிகாற்சோழன், பெருஞ்சோற்று உதயஞ்சேரலாதன். பழந்தமிழ் இசைக்கருவிகள் வடநாடு முழுவதும் வழக்கில் இருந்தன. (தோற்கருவிகள்) தமிழிலக்கணத்தைப் பின்பற்றி சமஸ்கிருதத்திலும் எழுத முயற்சி மேற்கொள்ளபட்டது. புணர்ச்சி இலக்கணம் சமஸ்கிருதத்தில் திணிக்கப்பட்டுள்ளது.
கி. மு. 599 - 527
மகாவீரர் காலம். ஜெயின மதம் தோற்றம் உயிர்த்துண்பம் தவிர்த்தல் இவரின் பெருங்கருத்து.
கி. மு. 560
பித்தகோரசு கிரேகத்தில் (கீரிஸ்) கணிதம், இசைக் கற்றுக் கொடுத்தக் காலம். மரக்கறி உண்ணல், யோகாசனம், ஓவியம் தமிழ் நாட்டில் கற்பிக்கப்பட்டன.
கி. மு. 551-478
கன்பூசியஸ் காலம். சீனர்களின் கல்விக்கு அடிப்படையே இவருடைய சமுதாய கல்வி, மக்களின் வாழ்முறை, மதம் யாவும்.
கி. மு. 500
கரிகாற் சோழன் காலம். உலக மக்கள் தொகை 100 மில்லியன். இப்போதைய இந்திய மக்கள் தொகை 25 மில்லியன்.
கி. மு. 478
இளவரசன் விசயா 700 துணையாளர்களுடன் இலங்கையில் சிங்கள அரசு ஏற்படுத்தல்.
கி. மு. 450
ஏதேன்சில் சாக்கரடீஸ் புகழோடு இருந்த காலம்.
கி. மு. 428 - 348
சாக்கரடீஸ் மாணவர் புளுட்டோவின் காலம்.
கி. மு. 400
கிரேக்கத்தில் மருத்துவமேதை இப்போகிரட்டீசின் காலம். பனினி வடமொழி இலக்கணம் அமைத்தார்.
கி. மு. 350 - 328
உதயஞ் சேரலாதன் காலம் (செங்குட்டுவன் நெடுஞ்சேரலாதன்)
கி. மு. 328 - 270
மகன் இமயவரம்பன் - நெடுஞ்சேரலாதன் ( ஆரியரை வென்றவன் - கிரேக்க யவனரை அடக்கியவன்)
கி. மு. 326
அலெக்சாண்டர் சிந்துப் பிரதேசத்தின் மீது படையெடுப்பு. வெற்றி அமையவில்லை.
கி. மு. 305
சந்திரகுப்த மெளரியரின் அட்சிக்காலம். கிரேக்க பேரரசு அமைத்த செலுக்கசை தோற்க்கடித்தவர்.
கி. மு. 302
சந்திரகுப்தரின் அமைச்சர் கெளடில்யர் அர்த்தசாத்திரம் எழுதல்.
கி. மு. 300
சீனர்கள் வார்த்த இரும்பு கண்டுபிடித்தல்.
கி. மு. 300
கல்வெட்டுகளில் சோழ, பான்டிய, சத்தியபுத்திர, சேர அரசுகள் இருந்தன. கி.மு. இரண்டாம் நூற்றாண்டு வரை தமிழ், பிராகிருதம் இரண்டும் எழுத்து மொழியாகவும் பேச்சு மொழியாகவும் விளங்கின. பிராகிருதம் - மக்களின் மொழி. நாணயங்களின் ஒரு பக்கம் தமிழ், மறுபக்கம் பிராகிருதம் என அமைந்திருந்தன.
கி.மு. 273-232
மெளரிய பேரரசர் அசோகர் காலம். தமிழ்நாடு தவிர மற்றவை இவர் வசம் இருந்தது. கலிங்க போர் இவரை புத்த மதத்திற்கு மாற வைத்தது. இவரது அசோக சக்கரம் இன்று இந்தியக் கொடியில் உள்ளது.
கி.மு. 270-245
சேரன் பல்யானை செல்கெழு குட்டுவன், சோழன் பெரும்பூண் சென்னி, பாண்டியன் ஒல்லையூர் பூதப் பாண்டியன், ஆகியோரின் காலம்.
கி.மு. 251
புத்த மதம் பரப்ப அசோகர் தன் மகனை இலங்கைக்கு அனுப்பினார்
கி.மு. 245-220
சேரன் களங்காய்க்கண்ணி நார்முடிச்சேரல் காலம்.
கி.மு. 221
புகழ் வாய்ந்த சைனாவில் 2600 கல் நீளமுள்ள பெரும் சுவர் கட்டப்பட்டது.
கி.மு. 220 - 200
கரிகாற்சோழனுக்கும் பெருஞ் சேரலாதனுக்கும் போர்.
கி.மு. 220-180
குடக்கோ நெடுஞ்சேரலாதன் ஆட்சி. உறையூர்ச் சோழன் தித்தன், ஆட்டணத்தி, ஆதிமந்தி, ஆகியோர் வாழ்ந்த காலம்.
கி.மு. 200
முனிவர் திருமூலர் காலம். 3047 சைவ ஆகமங்களின் தொகுப்பான திருமந்திரம் எழுதினார்.
கி.மு. 200
தமிழ்நாட்டில் பதஞ்சலி முனிவர் யோக சூத்திரங்கள் எழுதினார். 18 சித்தர்களில் ஒருவரான போகர் முனிவர் பழனி முருகன் கோவிலை ஏற்படுத்தினார்.
கி.மு. 125-87
ஆடு கோட்பாட்டுச் சேரலாதன் காலம்.
கி.மு. 87-62
செல்வக் கடுங்கோ வாழியாதன் ஆட்சி. பாரி, ஒரி, காரி, கிள்ளி, நள்ளி முதலிய குறுநில மன்னர்கள் ஆட்சி
கி.மு. 62-42
யானைக்கட்சேய் மாந்தரஞ்சேரல் இரும்பொறை ஆட்சி, சேரமான் மாரி வெண்கோ தொண்டியில் ஆட்சி. இக்காலத்தில் வாழ்ந்தவர்களில் குறிப்பிடத்தக்கவர்கள் தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியன், மாங்குடி மருதனார் கல்லாடனார்.(கல்லாடம்)
கி.மு. 42-25
பெருஞ்சேரலிரும்பொறை ஆட்சி, சேரமான் மாரிவென்கோ இராசசூயம் வேட்ட பெருநற்கிள்ளி, கானபெரெயில் கடந்த உக்கிரப்பெருவழுதி ஒற்றுமையாய் இருந்தார்கள். இவர்களை இன்றே போல்கநும்புணர்ச்சி என அவ்வை பாராட்டினார், மோசிக்கீரனார், பொன்முடியார் கொண்கானங்கிழான் நன்னன், கரும்பனூர்கிழன், நாஞ்சில் வள்ளுவன் குறிப்பிடத்தக்கவர்கள்.
கி.மு. 31
உலகப் பொது மறையாம் தமிழனின் நன்கொடையாம் திருக்குறளைத் தந்த திருவள்ளுவர் பிறந்த ஆண்டு.
கி.மு. 25-9
இளஞ்சேரல் இரும்பொறை ஆட்சி. பாண்டியன் பழையன் மாறன். கோப்பெருஞ்சோழன், பிசிராந்தையார், பொத்தியார், புல்வற்றூர் ஏயிற்றியனார் ஆகியோரின் காலம்.
கி.மு. 9-1
கருவூர் ஏறிய ஒள்வாட் கோப்பெருஞ்சேரல் இரும்பொறை, பாண்டியன் கீரன் சாத்தன் வாழ்ந்த காலம்.
கி.மு. 4
ஏசுநாதர் - கிருத்துவர் மதம் கண்டவர் பெத்தலயேமில் பிறந்தார்.
கி.பி. 1 - 20
சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவன் ஆட்சி, கோவூர் கிழார், தாமப்பல் கண்ணனார், ஐயூர் முடவனார், ஆவூர் முழங்கிழார், ஆலத்தூர் கிழார், மற்றோக்கத்து நப்பசலையார், இடைக்காடனார், ஆடுதுறை மாசத்தனார், வெள்ளைக்குடி நாகனார் வாழ்ந்த காலம்.

மாயன் காலண்டர்






2012 உலக அழிவு என்றதுமே...

அனைவரும் "மாயன்" களின் நாற்காட்டியைத்தான் முக்கியமாக குறிப்பிடுகிறார்கள்.
மாயன்கள் என அழைக்கப்படும் சாம்ராஜ்ஜம்.
எகிப்திய நாகரீகம் நிலவிய காலப்பகுதியில், தென்னமெரிக்க பகுதியில் வாழ்ந்த உயர்ந்த நாகரீகத்தையுடைய மக்கள் கூட்டமாகும். அவர்களால் உருவாக்கப்பட்ட கலண்டர் உலகின் பல முக்கிய சம்பவங்களை எதிர்வுகூறத்தக்கதாக இருந்ததுடன், நவீன கலண்டருக்கு மிகவும் ஒத்துப்போகக்கூடிய ஒன்றாகவுமுள்ளதாம்.


அப்போதைய காலத்தில் என்னென்று இவ்வளவு துள்ளியமாக நாற்காட்டியை வடிவமைத்தார்கள், என்பது இன்னமும் விளங்கமுடியாத புதிராகவே இருக்கிறது.
சரி... இந்த மாயன்களுக்கும் 2012 இக்கும் (உலக அழிவுக்கும்) என்ன சம்பந்தம் என்பதை பார்ப்போம்.மாயன்கலால் உருவாக்கப்பட்டு பாவிக்கப்பட்டதாக கருதப்படும் நாட்காட்டியில் இறுதி நாளாக 2012. 12. 21 குறிப்பிடப்பட்டுள்ளது. ( அதாவது அதோட கலண்டர் முடியிது.)
அதை முக்கியமாக வைத்துத்தான் 2012 ஓட உலகம் அழியப்போறதா சொல்லுறாங்க.
ஆனால், அதுக்கு பின்னரும் ஒரு வேறு நாற்காட்டி இருக்கலாம்.அது இன்னமும் ஆய்வாலர்களால் கண்டுபிடிக்கப்படாமலிருக்கலாம் என்றும் ஒரு கருத்து உள்ளது.


முதலாவதாக... மாயன் நாகரீகம் நிலவிய காலத்தில் நிலவிய எகிப்திய நாகரீகத்தில் இது பற்றி எதாச்சும் இருக்கா என்று பார்த்தால்... இருக்கிறது.
எகிப்திய பிரமிட்களின் சுவர்களில் உள்ள சித்திர எழுத்துக்கள் பல எதிர்கால உலக நிகழ்வுகளைப்பற்றியவையாம்.



எகிப்திய பிரமிட்டுக்கள் கி.மு 10000 ம் தொடக்கம் 5000 ஆண்டளவில் கட்டப்பட்டதாக கருதப்படுகிறது. அப்போதே அவர்கள் சூரியனுக்கும் பூமிக்கும் இடையிலான தூரம்... பூமியின் விட்டமெல்லாம் அறிந்து வைத்திருந்திருக்கிறார்கள்.
அவ்வளவு அறிவை அந்தக்காலத்திலேயே பெற்றிருந்தவர்களுக்கு பூமியின் எதிர்கால மாற்றத்தை கணிக்கும் சூட்சுமமும் தெரிந்திருக்க வாய்ப்புள்ளது.
அவர்களின் எழுத்துக்களை ஆராய்ந்ததின் படி 2007 இக்கும் 2023 இக்கும் இடைப்பட்ட காலத்தில் பூமிக்கு ஒரு மிகப்பெரிய ஆபத்து உள்ளது என்பதை மட்டுமே தெளிவாக கூறக்கூடியதாக உள்ளதாம்.


அந்த ஆபத்து என்னத்தால் ஏற்படப்போகிறது என்பதில் பல மாற்றுக்கருத்துக்கள் உள்ளன.
யுத்தம் (3ம் உலகயுத்தம்.) , சுனாமி, நில நடுக்கம், பாரிய கண்டப்பெயர்ச்சி, கடும் வறட்ச்சி, தொடர் மழை, புயல்... என பல காரணங்கள் அந்த எழுத்துக்களுக்கு கற்பிக்கப்படுகின்றன.


அடுத்து... நொஸ்ராடாமஸ் ( தீர்க்கதரிசி ) சொன்னதை பார்த்தால்...
அவரின் கணிப்பின் படி... ஃபீக்கஸ் எனும் நட்சத்திரம்... ( 13வது ராசி) 2012 இல் தோன்றுகிறதாம். அதன் பலனாக பாரிய அழிவுகள் ஏற்படுமாம்.
மேலும் அவரது கணிப்புக்களின் படி 3ம் உலகயுத்தம் இடம்பெறும்காலமாக 2007 தொடக்கம் 2023,30 என்று குறிப்பிட்டுள்ளார்.
அவரின் கருத்துப்படி...
"3ம் உலகயுத்தத்தில் கருவை அழிக்ககூடிய (அணு) ஆயுதங்களால் போர் கொரூரமாகும்... இந்த ஆய்தங்களின் தாக்கத்தால் கடல் அலைகள் 100 அடி உயரம் வரை எழும்... 100 கோடி பேர் சாவது என்பது ஆச்சரியப்படத்தக்கதல்ல. போரின் பாதிப்பு நீண்ட காலத்துக்கு நிலைத்திருக்கும்."
இதுவும் 2012 ஓடு சம்பந்தப்படுத்தி பார்க்கப்படுகிறது.

அடுத்து... புவியியலாலர்களின் கருத்துப்படி
பூமியில் 2000,2100 ஆண்டுகளுக்கு ஒரு முறை ஒரு சிறியலவிலான பனியுகம்
( உறைபனிக்காலம்) ஏற்படுமாம்.
இப்படியேற்பட்ட ஒரு குறுகிய பனியுகமே நீண்ட காலமாக செழிப்போடிருந்த எகிப்திய ராஜ்யியம் திடீரென வீழ்ச்சியடைந்ததுக்கு காரணம்.
அது ஏற்படக்கூடிய கால கட்டம் தற்போது நடந்துகொண்டிருக்கிறதாம்.
அது 2012 இல் தான் ஏற்படுமென... ஊகித்து உலக அழிவுடன் ஒப்பிடுகிறார்கள்.
அடுத்து... சமயங்களுடன் ( மதங்களுடன்) இதை சம்பந்தப்படுத்தியும் பார்க்கிறார்கள்.
பொதுவாக மதங்களில் உலகம் மீண்டும் புதுப்பிக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளதாம். அந்த புதுப்பிக்கப்படும் காலம் 2012 இலாக இருக்கலாம்... என்றும் கருதுகின்றார்கள்.


சமீபத்தில்... பூமியில் எதிர்பாராமல் ஏற்பட்டுக்கொண்டிருக்கும்... புயல், திடீர் வறட்சி, அதீத வெப்பம், அதீத குளிர், புவி நடுக்கம், எரிமலை வெடிப்பு, அண்டார்டிக்கா உருகல்... போன்றன... ஏதோ ஒரு ஆபத்து இருக்கு என்பதை காட்டுகிறது. 

மாயன்கள் வரலாறு பற்றி சில தகவல்கள்

மாயன் நாகரிகம் அமெரிக்காவில் வசித்த செவ்விந்தியர்களிடையே நிலவிய நாகரிகம். இந்த நிலப்பகுதிகள் காலத்தின் போக்கால் அரசியல் மாற்றங்களால் இன்று மத்திய அமெரிக்காவில் ஐந்து நாடுகளாக இருக்கின்றன. அவை மெக்ஸிகோ, கௌதமாலா, பெலீஸ், ஹோண்டுராஸ், எல் சால்வடார் ஆகியனவாகும்.



கி.மு 11,000 – மாயன் பகுதிகளில் மக்கள் முதன் முதலாக குடியேறத் துவங்கினர். இவர்கள் அக்கம்பக்க நாடுகளில் இருந்து வந்திருக்கலாம் என்று கருதபடுகிறது. இவர்கள் தங்கள் உணவுகளான காய்கறிகள், பழங்கள், பறவைகள், விலங்குகள் ஆகியவற்றை பச்சையாக சாப்பிட்டு வாழ்ந்தார்கள்.

கி.மு. 2600 - மாயன் நாகரிக தொடக்கம். மக்கள் வேட்டையை மட்டும் நம்பியிருக்காமல், விவசாயத்தில் ஈடுபட துவங்கினர். கி.மு. 700 - மாயங்களின் எழுத்துக்கள் தொடங்கின. இவை சித்திர எழுத்து என்ற வகை. அதாவது வாசிக்கும் முறையில் இல்லாமல் படம் வரைந்து விளக்கும் முறை. கி.மு. 400 - இந்த காலகட்டத்திலோ அல்லது இதற்க்கு முன்பாகவோ காலண்டர்கள் கண்டுபிடிக்கபட்டிருக்கலாம். கி.மு. 300 - மன்னர்கள், பிரபுக்கள்,பூசாரிகள் என்று சீரான ஆட்சிமுறை. ஒவ்வொரு பதவிக்குமான பொறுப்புகள் அதிகாரங்கள் வரையறுக்கப்பட்டிருக்கின்றன.

கி.மு. 100 - டேயோட்டிவாக்கன் (Teotihuacan) என்ற நகரம் மாயன் மக்களால் உருவாக்கப்பட்டது. இந்த நகரம் இன்றும் இருக்கிறது. கலை, மதம், வாணிபம், பிரமிடுகள், கோயில்கள், அரண்மனைகள், பொதுச்சதுக்கங்கள் பிரம்மாண்டமாக இருந்த ஊர் இது. கி.மு.50 - சேர்ரோஸ் (cerros) என்ற நகரம் உருவானது. கோவில்கள் மண்டபங்கள் ஆகியவை நிறைந்த நகரம் இது.

கி.பி. 1511 கோன்சலோ குரேரோ என்ற ஸ்பெயின் நாட்டுகாரரின் கப்பல் புயலில் சிக்கி மாயன் பகுதியில் கரை தட்டியது. அவர் அங்கு வாழும் உள்ளூர் பெண்ணை திருமணம் செய்து கொண்டார். கி.பி. 1517 ஸ்பெயின் நாடு மாயன் மக்கள் மேல் போர் தொடுத்தது. 90 சதவீத மாயன் மக்கள் கொல்லபட்டார்கள். அத்தோடு மாயன் மக்கள் கலாச்சாரம் மறைந்தது.



இவர்கள் சோளத்தை முக்கிய உணவாக பயன்படுத்தினார்கள். கோகோ இவர்களின் முக்கிய பானமாக இருந்திருக்கிறது. மாயன்கள் கடவுள்களை மிக நம்பினார்கள். மொத்தம் 166 கடவுள்கள் இவர்களது வழிபாட்டில் இருந்திருக்கிறது. பிரமாண்டமான கோயில்கள் திருவிழாக்கள் என இருந்த இவர்கள் பலியிடுவதில் விலங்குகள் மட்டுமின்றி கைதிகள், அடிமைகள், குழந்தைகள் என பலியிட்டுள்ளனர். இயற்கையை பற்றி கவலை படாமல் காடுகளை அழித்து விவசாயம் செய்தனர். இதனால் மழை குறைந்து பசி பட்டினி வறட்சி என்ற நிலைமையில், பதினைந்தாம் நூற்றாண்டில் ஸ்பெயினின் படையெடுப்பால் தொண்ணூறு சதவிகிதத்திற்கு மேல் கொல்லப்பட்டனர். சிலர் உயிரைக்காப்பாற்றிக்கொள்ள பெரு போன்ற நாடுகளுக்கு ஓடினர் என்று வரலாறு கூறுகிறது..




வாழ்ந்த பிரதேசம்

இவர்கள் வாழ்ந்த பிரதேசங்களில் காலத்தின் போக்கு மற்றும் அரசியல் மாற்றங்களால் இன்று மத்திய அமெரிக்காவில் ஐந்து நாடுகளாக இருக்கின்றன .அவை மெக்ஸிகோ,கவுதமாலா ,பெலீஸ் ஹொண்டுரஸ் எல்சல்வடோர் என்பனவாகும் .

நாகரிகத்தின் மைல்கற்கள்

    கி.மு 2600 : மாயன் நாகரிகத்தின் ஆரம்பம் மக்கள் வேட்டையை மட்டும் நம்பியிருக்காமல் விவசாயத்திலும் ஈடுபட ஆரம்பித்தனர் .
    கி.மு 700 : Hieroglyph எனும் சித்திர எழுத்து முறையினை மாயன்கள் ஆரம்பித்தனர் .இச் சித்திர எழுத்து முறையானது வாசிக்கும் முறையில் இல்லாமல் படம் வரைந்து விளக்கும் முறையாக இருந்தது .
    கி.மு 400 : இக்காலகட்டத்தில் இவர்களால் நாட்காட்டிகள் அறிமுகப்படுத்தப்பட்டன.
    கி.மு 300 : மன்னர்கள் ,பிரபுக்கள் ,பூசாரிகள் என ஒவ்வொரு பதவிக்குமான பொறுப்புக்கள்,அதிகாரங்கள் வரையறுக்கப்பட்டன .
    கி.மு 100 : Teotihuacan என்ற நகரம் மாயன் மக்களால் உருவாக்கப்பட்டது .இந்த நகரம் இன்றும் இருக்கிறது .கலை,மதம் வர்த்தகம் என்பன இங்கு காணப்பட்டன.
    கி.மு 50 : Cerrors என்ற நகரம் உருவாகியது. இது கோயில்கள் ,மண்டபங்கள் நிறைந்த நகரமாகும்.
    கி.பி 100 : பல உள்நாட்டுக் கலவரங்கள் ஆரம்பமாகின .மாயன் நாகரிகம் முதன்முதலாக சரிவுப் பாதையில் காலெடுத்து வைத்தது .
    கி.பி 900 : மேற்குப் பகுதியில் நகரங்கள் ஒவ்வொன்றாக மறைந்தன.மாயன் நாகரிகம் வீழ்ச்சியின் ஆரம்பம் .
    கி.பி 1511 : கோன்ஷலோ குரேரோ (Gonzalo Gurrero) என்ற ஸ்பானியர் புயலில் சிக்கி மாயன் பகுதியில் இறங்கினார்.
    கி.மு 1517 : ஸ்பெயின் நாடு மாயன் மக்கள் மீது போர்தொடுத்து 90 % மாயன் மக்களைக் கொன்றொழித்தது .அதனால் மக்கள் மாத்திரமின்றி,அவர்களின் கலாச்சாரமும் மறைந்தது.

உணவும் உடையும்

மாயன் மக்களின் பிரதான உணவாக சோளமும் பிரதான பானமாக கொக்கோவும் இருந்தது .உணவில் உப்பும் முக்கியமாக சேர்க்கப்பட்டது .காய்கறி ,இறைச்சி போன்றவற்றை உப்பில் இட்டுப் பதப்படுத்தினார்கள் .பருத்தி ,கம்பளி ,சணல்,கற்றாழை நார் போன்றவற்றால் நெய்யப்பட்ட உடைகளை அணிந்தனர்.

மத வழிபாடுகள்

மத நம்பிக்கைகளும் வழிபாட்டு முறைகளும் மாயன் மக்களிடத்தில் முக்கிய இடத்தை வகித்தன .மழை,காற்று,பிறப்பு ,இறப்பு ஆகாயம் ,கல்வி ,சூரியன் ,சந்திரன் ,அன்பு ,வியாபாரம் ,பாதாள உலகம் என 166 கடவுள்கள் இருந்தன .மிகப்பிரமாண்டமான கோயில்களை கட்டி அடிக்கடி திருவிழாக்களை நடத்தினர் .விலங்குகள் ,கைதிகள்,அடிமைகள் ,குழந்தைகள் என பலிகள் சாதாரணமாக நடந்தன.

கலைத்துறை

மன்னர்களின் அரண்மனைகள் ,கோயில்கள் ,எகிப்திய பிரமிட் போன்ற கட்டடங்கள் கலை நயத்தோடு நிர்மாணிக்கப்பட்டன .மனித உருவங்கள் துல்லியமாக செதுக்கப்பட்டன .மனித சக்தியே கட்டிடங்களை உருவாக்கப் பயன்பட்டது .கருங்கல் ,நீர் கலந்த சுண்ணாம்பு ஆகியவையே கட்டட மூலப்பொருட்களாக விளங்கின .மாயன்கள் அற்புதம் நிறைந்த சிற்பங்களைக் கல்லிலும் மண்ணிலும் உருவாக்கினார்கள் . விதவிதமான மட்பாண்டங்கள் செய்தார்கள். பீங்கான் ,பாத்திரங்கள் ,மரப்பட்டைகள் என்பனவற்றில் கடவுள்கள் ,இயற்கைக்காட்சிகள் ,மிருகங்கள் ,பறவைகள் ,என ஓவியங்களை தீட்டினார்கள் .தங்கத்தில் ஆலய மணிகளையும் கடவுள்களின் வடிவத்தில் முகமூடிகளையும் செய்தார்கள் .மாயன் மக்களின் எழுத்து சித்திர எழுத்தாகும்.இவற்றில் முந்நூறு குறியேடுகள் இருந்ததன .கல்வெட்டுக்கள்,மான்தோல் மற்றும் மர இலைகளால் தயாரிக்கப்பட்ட காகிதம் ஆகியவற்றில் இந்தக் குறியீடுகளைப் பயன்படுத்தி,தங்கள் கருத்துக்களை வெளிப்படுத்தினர் .

வானியல் அறிவு

இம்மக்களின் வானியல் தொடர்பான அறிவு வியக்கத்தக்கது .சூரிய ,சந்திர இயக்கங்களைப் பதவு செய்ய மாயன் மக்கள் வான் ஆய்வுகூடங்களை அமைத்திருந்தனர்.இவற்றில் தொலைநோக்குகள் போன்ற கருவிகளும் இருந்தன .1945க்குப் பின்னர்தான் விஞ்ஞானிகளால் "பால் வீதி "(Milkway )பற்றித் தெரிந்துகொள்ள முடிந்தது.ஆனால்,அதற்கும் பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே மாயன் மக்கள் பால்வீதி பற்றி அறிந்திருந்தார்கள்.

நாட்காட்டிகள்

பல்வேறு நாட்காட்டிகள் பாவனையில் இருந்தன. அதில் ஒரு நாட்காட்டியானது,365 நாட்களைக் கொண்டது. ஆண்டுகளுக்கு 18 மாதங்கள் .ஒவ்வொரு மாதமும் 20 நாட்களை கொண்டிருந்தது.இதனை "ஹாப்" (Haab ) என அழைத்தனர் .இதன்படி,வருடத்தில் 360 நாட்கள் சாதாரண எஞ்சிய 5 நாட்களை அதிஷ்டம் இல்லாத நாட்கள் என்றும் கருதினர் .கி.மு 550 இல் இந்த நாட்காட்டி முறை வந்திருக்கலாம் என கருதப்படுகிறது .மற்றொரு வகை நாட்காட்டியில் மொத்தம் 260 நாட்கள் ஒவ்வொரு ஆண்டும் 13 மாதங்களைக் கொண்டது .மாதமொன்றில் 20 நாட்கள். இதற்கு "ஸோல்கின் "(Tsolkin ) என்று பெயர். இது "புனித நாட்காட்டி "என்று அழைக்கப்பட்டது .மாதமொன்றின் 20 நாட்களுக்கும் 20 கடவுள்களின் பெயரை வைத்திருந்தனர்.

நாகரிகத்தின் வீழ்ச்சி

இரு பிரதான காரணங்கள் மாயன் நாகரிகத்தின் மறைவுக்கு வித்திட்டன .மாயன் மக்கள் தமது இயற்கைச் சூழலைக் காப்பாற்றுவதில் அக்கறை செலுத்தவில்லை .காடுகள் நிறைந்த தமது பகுதிகளில் மரங்களை வெட்டிச் சாய்த்தார்கள் இதனால் மலை குறைந்து வறட்சி ,பஞ்சம் ,பட்டினி ,நோய்கள் என்பன பெருகின .மாயன் சமுதாயம் இவற்றுக்குப் பலியாகின .

அடுத்த காரணம் .15 ஆம் நுற்றாண்டில் படையெடுத்த ஸ்பானியர்கள் 90 % மாயன் மக்களை கொன்றொழித்தனர் .எஞ்சியவர்கள் உயிரைக் காப்பாற்றிக்கொள்ளும் பொருட்டு தொலைவிலுள்ள பேரு நாட்டுக்கு உயிர் தப்பிச் சென்றனர்.மாயன் மக்கள் அழிந்ததனாலும் சொந்த இடத்தைவிட்டு ஓடியதன் காரணமாகவும் மாயன் நாகரிகமும் கலாச்சாரமும் காலப்போக்கில் மறைநது போயின .

மாயர் எண் முறைமை 20 அடிமான (base-20) எண் முறையை மாயன்கள் பயன்படுத்தினர். மாயன்களின் கணிதத் திறமைக்கு சான்று அவர்களின் பூஜ்ஜியம் பயன்பாட்டு முறையாகும். மிக வளர்ச்சியடைந்ததாகக் கருதப்படும் கிரேக்க நாகரிகங்கள் கூட பூஜ்ஜியம் பயன்பாட்டுமுறையை அராபியர்களிடம் இருந்தே அறிந்து கொண்டார்கள். மாயன்கள் எண்களை குறிப்பிட மிக எளிமையான அதே சமயத்தில் மிகப் பெரிய எண்களைக் கூட எழுதவல்ல ஒரு குறியீட்டு முறையைக் கையாண்டார்கள். இக்குறியீட்டு முறை ஒரு "_" மாதிரியான கோடு ஒரு புள்ளி ஒரு நீள்வட்டக் குறி ஆகியவற்றை மட்டுமே உள்ளடக்கியது.

மாயன் வானியல்

மற்றைய பெரு நாகரிகங்களைப் போல் மாயன்களும் வானியலில் வல்லமை பெற்றிருந்தனர். அவர்கள் சூரியன், சந்திரன், புதன், சுக்கிரன் போன்றவற்றின் சுழற்சி முறைகளை வெகுவாக அவதானித்து ஆவணப்படுத்தியிருந்தனர். சந்திர மற்றும் சூரிய கிரகணங்களை முன்கூட்டியே கணக்கீட்டுத் தீர்மனிக்கும் அளவிற்கு திறன் பெற்றிருந்தனர். சடங்குகளில் அதீத நம்பிக்கை பெற்றிருந்த மாயன்கள் வானியல் நிகழ்ச்சிகளை அடியோட்டியே சடங்குகளை நடத்தினர். ட்ரெடெக்ஸ் எனப்படும் மாயன் பஞ்சாங்கக் குறிப்பேட்டிலிருந்து இதற்கான ஆதாரங்கள் பெறப்படுகின்றன.

மாயன் நம்பிக்கைகள்

ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய நாகரிகம் என்பதற்கேற்ப மாயன்கள் பல்வேறு மத சடங்குகளையும் நம்பிக்கைகளையும் கொண்டிருந்தனர். ஒவ்வொரு ஆண்டும் ஒரு முறை சிற்றரசர்கள் அவர்களுடைய கடவுளிடம் பேசி ஆலோசனை பெறும் ஒரு சடங்கை நடத்துவர்.

இலக்கியம்/நூல்கள்

ஹைரோகிளிப்ஸ் என ஆங்கிலத்தில் அழைக்கப்படும் பட எழுத்து முறையை மாயன்கள் பயன்படுத்தினர். கல்வெட்டுக்கள் சிற்பங்கள் போன்றவற்றில் எழுதியது மட்டுமில்லாமல், ஒருவகையான புத்தகம் தயாரிக்கும் முறையையும் அவர்கள் பயன்படுத்தி வந்தனர். இவ்வாறு பல புத்தகங்களை அவர்கள் எழுதியிருக்கலாம் எனக் கருதப் படுகிறது. ஸ்பானிய ஏகாதிபத்தியத்துடன் வந்த அடிப்படைவாத கிருத்துவர்கள் பல மாயன் நூல்களை அழித்துவிட்டார்கள். இதில் தப்பியவை நான்கே நான்கு நூல்கள் தாம்.

வீழ்ச்சி

இவ்வளவு வளமையாக ஓங்கி செழித்து வளர்ந்த நாகரிகம் ஏறக்குறைய புல், பூண்டு இல்லாமல் போய்விட்டது. அதற்கான காரணத்தை அறிஞர்கள் இன்னும் அறுதியிட்டுக் கூறவில்லை. இவையாக இருக்கலாம் எனக் கருதப்படும் சிலவற்றில் முக்கியமானது, அண்டை நாடுகளுக்கிடையே அடிக்கடி ஏற்பட்ட பங்காளிச் சண்டைகள், காடுகளை அழித்து அவர்கள் நடத்திய விவசாயம் வெகு காலம் தாக்குப் பிடிக்கவில்லை, ஸ்பானிய குடியேற்றங்களுடன் வந்த அம்மை மற்றும் காலரா போன்ற வியாதிகள் பெருவாரியான மாயன்களை மிகக் குறுகிய காலத்தில் அழித்திருக்கலாம். ஆனால் இவையெல்லாம் தாண்டி சுமார் 6 இலட்சம் மாயன்கள் தற்காலத்திலும் மெக்ஸிகோ, குவதிமாலா போன்ற நாடுகளில் வசிக்கிறார்கள்.