Tuesday 30 March 2010
வந்துடுச்சு சூப்பர் குடை!
மழை, வெயில் போன்ற சீதோஷன நிலைக்கு நாம் குடை எடுத்துச் செல்வது வழக்கம். ஆனால், திடீரென்று பலத்த காற்று அடித்தால், குடை சட்டென்று வளைந்து மேல்நோக்கி துõக்கிக்கொள்ளும். அந்தநேரத்தில் சாலையில் நடந்து செல்லும் நமக்கு கொஞ்சம் அவமானமாக இருக்கும். இதுக்கு ஒரு விடிவுகாலம் வராதா என்று யோசித்து இருப்போம். படத்தில் நீங்கள் பார்க்கும் இந்த குடை மழை, வெயில், காற்று, பனி என்ற எதுக்கும் அசைந்து கொடுக்காதாம். இந்த குடையை நீங்கள் மாட்டிக்கொண்டு இரண்டு கைகளையும் வீசி வீசி நடக்கலாம். செல்போன் பேசலாம். ஏன்.. டீ கூட குடிக்கலாம். வழியில் செல்லும் மற்ற நபர்களை பதம் பார்க்காது. இந்தக் குடை காற்றில் மேல் நோக்கி துõக்காது. மழை பெய்தால் தோள்பட்டைக்கூட நனையாது. காற்றடித்தால் உங்கள் முடி கலையாது. இப்படி பல்வேறு நல்ல விஷயங்களை கொண்ட இந்த குடையை, கையில் பிடித்து செல்லவேண்டாம். மாறாக ஹெல்மட் டைப்பில் மாட்டிக்கொண்டு செல்ல வேண்டும்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment