Showing posts with label ஆன்மிகம். Show all posts
Showing posts with label ஆன்மிகம். Show all posts

Tuesday, 22 May 2012

அமாவசை தினத்தில் நல்ல காரியங்களை துவங்கலாமா?


கோவிலுக்கு சென்று அர்ச்சனை செய்யும் போது நமது பெயருக்கு செய்வது நல்லதா? இறைவன் பெயரில் செய்வது நல்லதா?

அர்ச்சனை என்றால் என்ன? இறைவனின் புகழை மனதார வாயார பாடுவதாகும். அப்படி பாடும் போதே நமது குறைகளையும் அவனிடம் முறையிடுவது தான் அர்ச்சனை செய்வதன் தாத்பரியம் கடவுள் நமக்கு தந்த நன்மைக்காக நன்றி செலுத்த வேண்டுமென்றால் அவர் பெயரில் அர்ச்சனை செய்யலாம் அவரிடம் எதாவது விண்ணப்பம் வைக்க வேண்டுமென்றால் நம் பெயரில் செய்யலாம். ஆனால் கடவுளுக்கு நம் கோரிக்கை தெரியாதா என்ன? எனவே பொதுவாக அவர் பெயரிலேயே செய்து விடுவது தான் சாலச்சிறந்தது ஆகும். 

அம்மன் ஆலயத்தில் எத்தனை முறை வலம் வரலாம்?

பொதுவாக ஆலயத்தை வலம் வருவது நமது உடமையும் மனதையும் ஆரோக்கியமாக வைத்து கொள்வதற்கே அதனால் எத்தனை முறை வேண்டுமென்றாலும் வலம் வரலாமென்று சொல்லி விடலாம். ஆயினும் எதற்கும் ஒரு இலக்கணம் வரன்முறை உண்டு அதன் அடிப்படையில் நமது பெரியவர்களும் சாஸ்திரங்களும் அம்மன் ஆலையத்தில் ஐந்துமுறை வலம் வரலாமென்று சொல்கிறார்கள். 

அமாவசை தினத்தில் நல்ல காரியங்களை துவங்கலாமா?

அமாவாசைக்கு பிறகு வரும் நாட்களை வளர்பிறை நாட்கள் என்று அழைக்கிறோம். எனவே புதிய காரியங்களை வளர்பிறையின் துவக்க நாளிலிருந்து ஆரம்பிப்பது நலமென்று நிறையப்பேர் நம்புகிறார்கள். சிலர் அமாவாசை என்பது சந்திரன் இல்லாத நாள் அதாவது பூமிக்கு சந்திரன் தெரியாது அன்று இருட்டாக இருக்கும். எனவே இருட்டு பொழுதில் நற்காரியங்களை செய்ய கூடாது என்றும் சொல்கிறார்கள். இதில் எது சரி எது தவறு என்று முடிவெடுப்பது மகா சிரமமான காரியம். அவரவர் நம்பிக்கை அவரவர்க்கு என்று பொத்தாம் பொதுவாக சொல்லிவிட்டு போகலாம். ஆனால் அது சரியல்ல.

இதை ஜோதிட சாஸ்திரம் மற்றும் வானியல் சாஸ்திரத்தின் அடிப்படையில் பார்க்க வேண்டும். அமாவசை தினத்தில் சூரியனும் சந்திரனும் ஒரே நேர்கோட்டில் சந்திக்கின்றன அன்று இவ்விரு கிரகங்களும் ஒரே ராசியில் இருக்கும் அந்த நேரத்தில் இரண்டு கிரகங்களில் ஆகர்ஷன சக்தியும் மிக அதிகமாக இருக்கும். இதனால் மனித மூளையில் துரிதமான மாற்றங்கள் நிகழும் வாய்ப்பு நிறைய உண்டு அதாவது மனம் கொந்தளிப்பான நிலையிலேயே இருக்கும். ஏறக்குறைய கடலை போல எனவே அந்த நாட்களில் சுப காரியங்கள் செய்வது கூட தவறு அல்ல ஆனால் புதிய காரியங்களை துவங்குவது தவறு என்பதே சரியான கருத்தாகும். 

Wednesday, 25 January 2012

சாதம் பிரசாதம் ஆவது எப்படி...?


உறவினர் வீட்டுக்கு போனால் எங்கள் சொந்தகாரரை பார்த்துவிட்டு வருகிறோம் என்கிறார்கள்

 ஆனால் ஆலயம் சென்று வந்தால் சுவாமி தரிசனம் செய்து விட்டு வருகிறோம் என்று சொல்கிறார்கள்

 அது எப்படி மனிதனை பார்த்தால் வெறும் பார்வை என்றும் சுவாமியை கண்டால் தரிசனம் என்றும் ஒரே செயலை இரு வார்த்தைகளில் அழைக்கிறோம்?

 உண்மையில் தரிசனம் என்பது என்ன?  கோபுரத்தையோ, கொடி மரத்தையோ அல்லது வேறு தெய்வீக பொருட்களையோ தூரத்திலிருந்து காண்பது கூட எப்படி தரிசனமாகும் என்று பலருக்கு குழப்பம் வரும் 



அரிசியை கழுவி பாணையில் இட்டு வேக வைத்தால் அது சாதம் தான். 

 அதில் என்ன புனிதத்தன்மை வந்து திடீர் என பிரசாதம் ஆகிவிடுகிறது?

  கடவுளுக்கு மனபூர்வமாக அர்பணிக்கும் போது சாதாரண குழாங்கல் கூட சாளக்கிராம கல்லாகி விடுகிறது அது போல சாதாரண சாதமும் அன்போடு படைக்கும் போது பிரசாதமாகி விடுகிறது 

 ஒரு பொருளை வெறும் கண்ணால் பார்ப்பது திருஷ்டி மட்டும் தான். அதையே பக்திபூர்வமாக பார்ப்பது தரிசனமாகும்.

Monday, 12 July 2010

தண்ணீரில் எரியும் விளக்கு.!


யோக மார்க்கத்தில் உள்ள சில பயிற்சிகளை சிரத்தையோடு தொடரச்சியாக செய்யும் போது ஒவ்வொரு சாதகனுக்கும் சித்துக்கள் என்ற இயற்கையை கட்டுபடுத்தும் ஆற்றல் இயல்பாக கிடைக்கிறது. அப்பாடி சித்துக்களை பெற்ற எவரும் அவசியம் ஏற்பட்டால் ஒழிய அனாவசியமான வேளையில் அதை பயன்படுத்துவது கிடையாது காரணம் இறைவனை அடைவது ஒன்றே யோக மார்க்கத்தின் குறிக்கோள் என்பதனால் சித்துக்கள் மாயா சக்தி என்றும் சாதனையாளர்களை தவறான பாதையில் வழிநடத்தும் என்றும் கருதப்பட்டு அவைகள் ஒதுக்கபடுகின்றன நிறைநிலை அடைந்த ஞானிகள் சித்துக்களை மலம் என்றே அழைக்கிறார்கள் எனவே நாம் தவம் செய்து பெறுகின்ற சித்துக்களை இங்கு பேச வேண்டாம் சாதாரண மனிதர்கள் சுயலாபத்திற்க்காக பயன்படுத்தும் சித்துக்களின் ரகசியத்தை சிறிது ஆராய்வோம்

உலகில் எந்த நாட்டு மூலிகைக்கும் இல்லாத சிறப்புகளும் சக்திகளும் தமிழ்நாட்டு மூலிகைகளுக்கு நிறையவே உண்டு இந்த மூலிகைகளின் ரகசியங்களை நமது முன்னோர்கள் மிக நன்றாக அறிந்திருந்தார்கள். மூலிகைகளில் உள்ள ரகசிய சக்திகளை எப்படி பயன்படுத்துவது என்பது அவர்களுக்கு கைவந்த கலையாக இருந்தது. தாங்கள் கற்ற பாடுபட்டு பெற்ற ரகசியங்களை பல ஏடுகளில் ஆவணங்களாக எழுதிவைக்கவும் செய்திருக்கிறார்கள். அவற்றை படிக்கும் போது நமக்கு வியப்பு மட்டுமல்ல இப்படியெல்லாம் கூட இருக்குமா என்ற மலைப்பும் ஏற்படுகிறது.

நீங்கள் தெருவோரங்களில் மோடிமஸ்தான்கள் செய்கின்ற வித்தைகளை கண்டிப்பாக பார்த்திருப்பீர்கள் அந்த வித்தைகளில் மிக முக்கியமாக சிறிய கிண்ணத்தில் விதைக்கப்படும் கம்பம்புல் சில நிமிட நேரத்திலேயே வளர்ந்து கதிர்சாய்வதை பார்க்க தவறியிருக்க மாட்டீர்கள் ஒரு விதை முளைத்து பயிர் தர வேண்டுமென்றால் குறைந்தது மூன்றுமாத காலமாவது ஆகவேண்டும். ஆனால் சில நிமிட நேரங்களில் மோடிமஸ்தான்கள் பயிர் வளர வைப்பது மந்திர சக்தியால் இருக்கலாமோ? என்று எண்ண தோன்றும். ஆனால் உண்மையில் இதற்கு மந்திரம் வேண்டாம் மூலிகைகளால் தந்திரம் செய்ய கற்றிருந்தால் போதும்

மிக சாதாரணமாக கிடைக்கும் நாட்டு கோழி முட்டையில் கம்பம்புல்லை மூன்று நாட்கள் ஊறவைத்து அதை வித்தை காட்டும் மைதானத்தில் மண்ணில் புதைத்து சில ஒழுங்கு முறைப்படி வெளிச்சம் படும்மாரும் இருட்டு சூளுமாரும் மூடி மூடி திறந்தால் பருவநிலை மாற்றம் போன்ற நிகழ்வு விதைக்கு ஏற்பட்டு அது சில நிமிடங்களில் வளர்ந்து கதிர் தள்ளிவிடுகிறது இதை சோதனைக்காக நீங்கள் கூட செய்து பார்க்கலாம் இதை போலவே பச்சை தவளையின் நெய்யை எடுத்து கைகளில் பூசி கொண்டால் கொதிக்கும் எண்ணெயில் கூட கைகளுக்கு பாதிப்பு ஏற்படாமல் கையை முக்கி எடுக்கலாம்.

சில மந்திர வாதிகளும் சாமியார்களும் பஞ்சு திரி போட்டு எண்ணெய்க்கு பதிலாக பச்சை தண்ணீர் ஊற்றி விளக்கெரிப்பதை அறிந்த்ருப்பீர்கள் இந்த காலத்தில் கடைகளில் கிடைக்கும் எண்ணெய் கலப்படமாகி விட்டதனால் அவற்றை ஊற்றி கூட தீபம் ஏற்றுவது மகா சிரமமாக இருக்கிறது. இந்த நிலையில் தண்ணீர் விட்டு தீபம் ஏற்றுவது கற்பனை கூட செய்துபார்க்க முடியாத காரியமாக தெரியலாம். சற்று பொறுமையும் கூர்மையான அறிவு இருந்தால் உங்களால் கூட தண்ணீரில் விளக்கேற்ற முடியும்.

அத்தி பழத்தை பிய்த்து பார்த்தால் அத்தனையும் சொத்தை என்று ஒரு பழமொழியை நீங்கள் அடிக்கடி கேட்டிருக்கலாம் பூக்களே பூக்காமல் பழங்களை பழுக்கும் அதிசய மரம் அத்தியாகும். இந்த அத்திமர வேரில் அதிகாலை வேளையில் கத்தியால் கீறினால் ஒருவித நீர் சுரக்கும் இதை அத்திபால் என்று சொல்வார்கள். அத்திபாலில் பருத்தி திரியை ஊறவைத்து பிறகு வெயிலில் உலர்த்தி பத்திரபடுத்தி கொள்ளவும் பிறகு விளக்கில் தண்ணீரை ஊற்றி இந்த திரியை போட்டு தீபம் ஏற்றினால் மிக அருமையாக விளக்கு எரியும்.

களிமண்ணையும் செம்மண்ணையும் பிசைந்து சிவலிங்கம் செய்வதை பார்த்திருப்போம் ஆற்றுமணலில் சிவலிங்கம் செய்ய முடியும் என்று யாரவது சொன்னால் அவனை அறியாத பிள்ளை அல்லது அறிவு வளராத ஜென்மம் என்று கேலி பேசுவோம். நிஜமாகவே ஆற்றுமணலை மட்டுமல்ல கடல் மணலை கூட பிசைந்து சிவலிங்கம் செய்யலாம் அதற்கு தேவையானது தண்ணீர் விட்டான் கிழங்கு என்ற ஒரு வித மூலிகையே இப்படி எவ்வளவோ விஷயங்கள் மறைந்து போய் சிலபேருக்கு மட்டும் தெரிந்ததாக இருக்கிறது இதை பலபேரும் அறிந்துகொள்ளும் படி செய்தால் பல சங்கடங்களை விலக்கலாம் அதற்கு தேவை உழைப்பும் ஆர்வமும் பொறுமையும் இந்த மூன்றும் உங்களிடம் இருந்தால் நீங்கள் கூட அதிசயங்களை நிகழ்த்தலாம்.

Wednesday, 16 September 2009

நல்ல குருவை நாம் அடைய...?



  பொதுவாக நாம் நமது சந்தேகங்களுக்கு நமது கேள்விகளுக்கு பதிசொல்பவர்களை விளக்கம் கொடுப்பவர்களை குரு என்று நினைக்கிறோம் உண்மையில் பதில் சொல்பவர் குரு அல்ல யாரை பார்த்தவுடன் நமக்கு சந்தேகமே எழாமல் கேள்விகள் பிறக்காமல் பெறவேண்டியது அனைத்தையும் பெற்றுவிட்டதாக திருப்தியும் நிறைவும் ஏற்படுகிறதோ எவர் முன்னால் நமது ஆத்மா அமைதி அடைகிறதோ அவரே நமது குரு.

இத்தகைய குருவை நாம் தேடிபோகவேண்டிய அவசியமில்லை அவரும் நம்மை தேடி வரவேண்டிய தேவையில்லை காரணம் அவர்தேடினால் கிடைக்க மாட்டார் தானாகவும் கண்ணுக்கு அகபட்டமாட்டார் கடவுளால் நமக்கு கிடைக்கும் அவர் தனது ஞானத்தாலும் அருளாலும் அன்பாலும் நம்மை முழுமையாக அரவணைத்து கொள்வார்.

கடவுளால் அனுப்பபட்ட அவரை கண்டுபிடிப்பது கடினமல்ல மிக சுலபம் கண்களையும் காதுகளையும் விசாலமாக திறந்து வையுங்கள் பாலை நிரப்புவதற்கு பானை எப்படி எப்போதுமே வாய்திறந்து கொண்டு இருக்குமோ அப்படியே உங்கள் மனமென்னும் பானையை திறந்து வையுங்கள் எவர் முன்னால் சரணடைய வேண்டுமென்ற கையெடுத்து கும்பிட வேண்டுமென்ற எண்ணம் தானாக உதிக்கிறதோ அப்போதே அவரை நீங்கள் அடைந்துவிடுவீர்கள்.