
பரம்பரையும் ஒரு காரணம்!
தினப்படி செய்தித்தாளை படிக்கும்போது நம்ம நாட்டுல தற்கொலை செய்திருப்பவர்களின் எண்ணிக்கை உயர்ந்துள்ளது. இதற்கு காரணம், மன அழுத்தம், பணிச்சுமை என்று பல்வேறு காரணங்கள் சொல்லிக்கொண்டிருந்தாலும், உங்கள் பரம்பரையும் ஒரு காரணம் என்று அடித்துச் சொல்லியிருக்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள். சமீபத்தில் தற்கொலை செய்த சிலரின் நடவடிக்கைகளை பார்த்தபோது, தற்கொலை என்ற எண்ணம் அந்த நேரத்தில் அவர்கள் எடுக்கும் முடிவு என்றாலும், இந்த எண்ணம் அவர்களுக்கு தானாக தோன்றவில்லை. இது அவர்களின் உடலில் உள்ள ஜீன்களும் ஒரு காரணம் என்று சொல்லியிருக்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள். உங்க அப்பா, தாத்தா... அல்லது அவங்களுக்கு முன் தோன்றியவர்கள் யாராவது ஒருவருக்கு தற்கொலை போன்ற எண்ணங்கள் அடிக்கடி தோன்றியிருக்கலாம். அந்த எண்ணங்களின் பிரதிபலிப்புத்தான் இப்போது இவர்கள் தற்கொலை செய்துகொள்வதற்கும் காரணம் என்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள்.
No comments:
Post a Comment