Thursday 25 February 2010

திக்.. திக்.. மாத்திரைகள்!

பாராசிட்டாமலின் நச்சுவிளைவுகளை ஏன் இவ்வளவு விளக்கமாக எடுத்துச் சொல்கிறேன் என்றால், அதனால் ஏற்படும் பாதிப்புகளை உணர்வதற்காகத் தான். 1989ம் ஆண்டு இங்கிலாந்தில் பாராசிட்டாமல் மருந்தை உட்கொண்டு அதாவது மருந்தினால் ஏற்படும் பாதிப்புகளால் இறப்பவர்களில் அதிகமாகப் பயன்படுத்தும் நாலாவது மருந்தாக இருப்பது பாராசிட்டாமல் என்று ஓர் ஆய்வறிக்கை குறிப்பிடுகிறது.
மருந்தினால் ஏற்படும் உயிரிழப்பில் நான்காவது இடத்தில் இருக்கும் பாராசிட்டாமல் இந்தியாவில் யாரும் எப்போது வேண்டுமானாலும் எவ்வளவு வேண்டுமானாலும் எடுத்துக் கொள்ளலாம் என்ற நிலையில் இருப்பதால், அதனால் ஏற்படும் நச்சு விளைவுகளை எடுத்துச் சொல்வது அவசியமாகிறது.
இங்கே குறிப்பிடப்படவேண்டிய விஷயம், இந்தியாவில் கல்லீரல் பாதிப்புகள் மற்றும் சிறுநீரக பாதிப்புகள் ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தாலும், பாதிப்பு எதனால் வந்தது என்று ஆராய்வதற்கு மக்களிடத்தில் வசதியும் இருக்காது. குவியும் நோயாளிகளால் மருத்துவர்களுக்கு நேரமும் இருக்காது. உடனடியாக கல்லீரலையோ, சிறுநீரகத்தையோ பாதிப்பிலிருந்து மீட்க முயற்சிக்கவே நமது பணமும், நேரமும் செலவாகியிருக்கும்.
இவ்வளவு பிரச்னைகளுக்கும் காரணமான பாராசிட்டாமலின் மறுபக்கம்தான் இது. சிறு தலைவலி மற்றும் லேசான காய்ச்சல், அதாவது உடம்பு சூடாவது போன்று இருந்தாலே பாராசிட்டாமலை அடிக்கடி பயன்படுத்துபவர்கள் இதை கவனத்தில் கொள்ள வேண்டும் என்கிறார் இளம்பாரதி.
இன்றைய அவசர உலகில் பலரும் காய்ச்சல், தலைவலி மற்றும் சின்னச் சின்ன உடல் சிக்கல்களுக்கு உடனடியாக ஒரு மாத்திரையை விழுங்க வேண்டும். உடனே உடல் உபாதை தீரவேண்டும் என்று கருதுகின்றனர்.
ஒருவருக்கு தலை வலிக்கிறது என்றால் அதற்கு எத்தனை எத்தனை காரணங்கள் இருக்கலாம் என்று தெரியுமா? பார்வைக் கோளாறு, சைனஸ் பிரச்னை, தலையில் நீர் அழுத்த நோய் என பல்வேறு விஷயங்களால் தலைவலி ஏற்படலாம். இதையெல்லாம் பார்க்காமல், வெறும் தலைவலியைப் போக்க வலி நிவாரணி சாப்பிடுவதாற் ஒரு வியாதியை நமக்கு உணர்த்துவதற்காக வந்த தலைவலி போய்விடலாம். ஆனால், அந்த நோய்... நம்மை என்ன செய்யும் என்று யாராவது சிந்தித்து பார்த்திருப்போமா?
அதுமட்டுமல்லாமல் எதற்கெடுத்தாலும் மாத்திரை சாப்பிட்டுவந்தால், இயற்கையிலேயே நம் உடம்பில் இருக்கும் நோய் எதிர்ப்பு சக்தி பயனற்று போய்விடாதா? அவற்றிற்கு வேலையே கொடுக்காமல் இப்படி மாத்திரையை போட்டு முடக்கிவிட்டால், அவற்றிற்கும் இயங்கும் சக்தி போய்விடுமே... இதை நாம் எப்போதுதான் யோசிக்கப் போகிறோம்?
சில மருத்துவர்கள் எழுதிக்கொடுக்கும் மாத்திரைகளில் அதிகப்படியான செயலாற்றுத் திறன் காரணமாக, நோய் பாதித்தவர், நோயின் தாக்குதலை விட, மருந்தின் தாக்கத்தினால் கடுமையாக பாதிக்கப்படும் நிலை ஏற்படும். தலை சுற்றல், கை கால் நடுக்கம், நாக்கு, உதடு வறண்டு போவது, உடலில் நீர்த்தன்மை குறைவது, நினைவை இழப்பது வரை ஒரு மாத்திரையின் பக்க விளைவுகள் ஏராளம் ஏராளம்!

No comments:

Post a Comment