காலையில ஒழுங்கா சாப்பிடுங்க; நோயை விரட்டுங்க!
தலைப்பை படித்ததும், தலையும் புரியலை; வாலும் புரியலைன்னுதானே யோசிக்கிறீங்க... நம்மில் பல பேருக்கு இருக்கும் தலையாய பிரச்னை இந்த ‘கோல்ட்‘. இந்த கோல்ட் பலபேருக்கு பல விதங்களில் இருக்கும். ஒருத்தருக்கு மூக்கில் நீர் ஒழுகும். சிலருக்கு சளி பிடித்திருப்பது போல் இருக்கும். சிலருக்கு ஒற்றைத் தலைவலி ரெட்டைத் தலைவலின்னு சொல்லிக்கிட்டு இருந்தாலும், இதற்கெல்லாம் ஒரே ஒரு பெயர் ஜலதோஷம் அல்லது கோல்ட்னு சொல்வாங்க.
கரெக்ட்தான். நீங்க சொல்றது எல்லாம் புரியுது. இந்தப்பிரச்னை எனக்கும் இருக்கு. இதுக்கு என்ன தீர்வு அதை மட்டும் சொல்லுங்க...ன்னுதானே கேட்கறீங்க... சொல்றேன்!
இரவு குறைந்தபட்சம் 7 மணி நேரமாவது துõங்குங்க. எந்தக் காரணத்தைக் கொண்டும் காலை சாப்பாடு சாப்பிடாம இருக்காதீங்க... இதை கொஞ்சம் முறைப்படுத்திப் பாருங்க கோல்டை முற்றிலுமா சுகப்படுத்த முடியலைன்னாலும், கொஞ்சம் குறைக்கலாம்னு சொல்றாங்க மருத்துவ ஆராய்ச்சியாளர்கள்!
Wednesday, 3 February 2010
சாப்பிட்டா தலைவலி வராது
காலையில ஒழுங்கா சாப்பிடுங்க; நோயை விரட்டுங்க!
தலைப்பை படித்ததும், தலையும் புரியலை; வாலும் புரியலைன்னுதானே யோசிக்கிறீங்க... நம்மில் பல பேருக்கு இருக்கும் தலையாய பிரச்னை இந்த ‘கோல்ட்‘. இந்த கோல்ட் பலபேருக்கு பல விதங்களில் இருக்கும். ஒருத்தருக்கு மூக்கில் நீர் ஒழுகும். சிலருக்கு சளி பிடித்திருப்பது போல் இருக்கும். சிலருக்கு ஒற்றைத் தலைவலி ரெட்டைத் தலைவலின்னு சொல்லிக்கிட்டு இருந்தாலும், இதற்கெல்லாம் ஒரே ஒரு பெயர் ஜலதோஷம் அல்லது கோல்ட்னு சொல்வாங்க.
கரெக்ட்தான். நீங்க சொல்றது எல்லாம் புரியுது. இந்தப்பிரச்னை எனக்கும் இருக்கு. இதுக்கு என்ன தீர்வு அதை மட்டும் சொல்லுங்க...ன்னுதானே கேட்கறீங்க... சொல்றேன்!
இரவு குறைந்தபட்சம் 7 மணி நேரமாவது துõங்குங்க. எந்தக் காரணத்தைக் கொண்டும் காலை சாப்பாடு சாப்பிடாம இருக்காதீங்க... இதை கொஞ்சம் முறைப்படுத்திப் பாருங்க கோல்டை முற்றிலுமா சுகப்படுத்த முடியலைன்னாலும், கொஞ்சம் குறைக்கலாம்னு சொல்றாங்க மருத்துவ ஆராய்ச்சியாளர்கள்!
தலைப்பை படித்ததும், தலையும் புரியலை; வாலும் புரியலைன்னுதானே யோசிக்கிறீங்க... நம்மில் பல பேருக்கு இருக்கும் தலையாய பிரச்னை இந்த ‘கோல்ட்‘. இந்த கோல்ட் பலபேருக்கு பல விதங்களில் இருக்கும். ஒருத்தருக்கு மூக்கில் நீர் ஒழுகும். சிலருக்கு சளி பிடித்திருப்பது போல் இருக்கும். சிலருக்கு ஒற்றைத் தலைவலி ரெட்டைத் தலைவலின்னு சொல்லிக்கிட்டு இருந்தாலும், இதற்கெல்லாம் ஒரே ஒரு பெயர் ஜலதோஷம் அல்லது கோல்ட்னு சொல்வாங்க.
கரெக்ட்தான். நீங்க சொல்றது எல்லாம் புரியுது. இந்தப்பிரச்னை எனக்கும் இருக்கு. இதுக்கு என்ன தீர்வு அதை மட்டும் சொல்லுங்க...ன்னுதானே கேட்கறீங்க... சொல்றேன்!
இரவு குறைந்தபட்சம் 7 மணி நேரமாவது துõங்குங்க. எந்தக் காரணத்தைக் கொண்டும் காலை சாப்பாடு சாப்பிடாம இருக்காதீங்க... இதை கொஞ்சம் முறைப்படுத்திப் பாருங்க கோல்டை முற்றிலுமா சுகப்படுத்த முடியலைன்னாலும், கொஞ்சம் குறைக்கலாம்னு சொல்றாங்க மருத்துவ ஆராய்ச்சியாளர்கள்!
பேசி பிரியும் ஜோடிகள்
நடந்ததை பேசியே பிரியும் ஜோடிகள்!
கல்யாணம் முடிஞ்ச ஆறே மாசத்துல டைவர்சுக்கு நீதிமன்ற படியேறும் வழக்கம் நம் நாட்டில் ரொம்பவே அதிகரிச்சிருக்கு. இது நம்ம நாட்டு கலாசாரமா...? அயல்நாட்டு கலாசாரமா என்று பட்டிமன்றம் வைப்பதை விடுத்து, இந்த மாதிரி டைவர்ஸ் அடிக்கடி நடக்கறதுக்கு என்ன காரணம் என்று யோசித்துப் பார்த்தால், ஈகோ... என்ற ஒரு வார்த்தையில் சொல்லிவிட்டு சென்றுவிடுவோம். ஆனா, இதையே ஒரு ஆராய்ச்சியாவே பண்ணிட்டாங்க கலிபோர்னியா மாநில பல்கலைக்கழகம். இவங்க டைவர்ஸ் ஆன சில தம்பதிகளை வைத்து மனோரீதியா ஆராய்ச்சி செஞ்சி பார்த்தபோது, இவர்கள் ஈகோ என்ற ஒன்றுக்காக டைவர்ஸ் ஆவதை விட, பழைய சம்பவங்களை அதாவது நடந்து முடிந்த சில விஷயங்களைப் பற்றி பேசி, விவாதம் செய்து, அதனால் பாதி சண்டை வருகிறது. அதன் உச்சக்கட்டம்தான் இந்த டைவர்ஸ் என்று சொல்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள்.
கல்யாணம் முடிஞ்ச ஆறே மாசத்துல டைவர்சுக்கு நீதிமன்ற படியேறும் வழக்கம் நம் நாட்டில் ரொம்பவே அதிகரிச்சிருக்கு. இது நம்ம நாட்டு கலாசாரமா...? அயல்நாட்டு கலாசாரமா என்று பட்டிமன்றம் வைப்பதை விடுத்து, இந்த மாதிரி டைவர்ஸ் அடிக்கடி நடக்கறதுக்கு என்ன காரணம் என்று யோசித்துப் பார்த்தால், ஈகோ... என்ற ஒரு வார்த்தையில் சொல்லிவிட்டு சென்றுவிடுவோம். ஆனா, இதையே ஒரு ஆராய்ச்சியாவே பண்ணிட்டாங்க கலிபோர்னியா மாநில பல்கலைக்கழகம். இவங்க டைவர்ஸ் ஆன சில தம்பதிகளை வைத்து மனோரீதியா ஆராய்ச்சி செஞ்சி பார்த்தபோது, இவர்கள் ஈகோ என்ற ஒன்றுக்காக டைவர்ஸ் ஆவதை விட, பழைய சம்பவங்களை அதாவது நடந்து முடிந்த சில விஷயங்களைப் பற்றி பேசி, விவாதம் செய்து, அதனால் பாதி சண்டை வருகிறது. அதன் உச்சக்கட்டம்தான் இந்த டைவர்ஸ் என்று சொல்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள்.
தற்கொலை காரணம்

பரம்பரையும் ஒரு காரணம்!
தினப்படி செய்தித்தாளை படிக்கும்போது நம்ம நாட்டுல தற்கொலை செய்திருப்பவர்களின் எண்ணிக்கை உயர்ந்துள்ளது. இதற்கு காரணம், மன அழுத்தம், பணிச்சுமை என்று பல்வேறு காரணங்கள் சொல்லிக்கொண்டிருந்தாலும், உங்கள் பரம்பரையும் ஒரு காரணம் என்று அடித்துச் சொல்லியிருக்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள். சமீபத்தில் தற்கொலை செய்த சிலரின் நடவடிக்கைகளை பார்த்தபோது, தற்கொலை என்ற எண்ணம் அந்த நேரத்தில் அவர்கள் எடுக்கும் முடிவு என்றாலும், இந்த எண்ணம் அவர்களுக்கு தானாக தோன்றவில்லை. இது அவர்களின் உடலில் உள்ள ஜீன்களும் ஒரு காரணம் என்று சொல்லியிருக்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள். உங்க அப்பா, தாத்தா... அல்லது அவங்களுக்கு முன் தோன்றியவர்கள் யாராவது ஒருவருக்கு தற்கொலை போன்ற எண்ணங்கள் அடிக்கடி தோன்றியிருக்கலாம். அந்த எண்ணங்களின் பிரதிபலிப்புத்தான் இப்போது இவர்கள் தற்கொலை செய்துகொள்வதற்கும் காரணம் என்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள்.
வலது பக்கம்
வலது பக்கம்னா... சந்தோஷம்!
நாய் நன்றியுள்ள விலங்கு. வாலை ஆட்டுதலை வைத்துதான் நம்மவர்கள், நாய் நன்றியுள்ள விலங்கு என்று சொல்லி வைத்தார்களோ என்னவோ...? ஆனால், இதையும் வேலை மெனக்கிட்டு ஆராய்ச்சி செய்து, நாய் வலதுபக்கமாய் வாலை ஆட்டினால் நல்ல சந்தோஷ மூடில் இருக்கிறது என்று கண்டுபிடித்துள்ளார்கள் ஆராய்ச்சியாளர்கள். என்னது... இதையுமா போய் ஆராய்ச்சி பண்ணியிருக்காங்க...? என்றுதானே ஆச்சர்யமாய் கேட்கறீங்க. ஆமாம்... லண்டனின் விக்டோரியா பல்கலைக்கழகத்தின் ஆராய்ச்சியாளர்கள்தான் இந்த மேற்படி ஆராய்ச்சியை செய்திருக்கிறார்கள். இவர்கள் இந்த சோதனைக்கு 500 நாயை பயன்படுத்தியிருக்கிறார்கள். அந்த நாயுடனேயே இருக்குமாறு ஒரு ரோபோவையும் வைத்து ஆராய்ச்சி செய்ததில்தான் இந்தக் கண்டுபிடிப்பை கண்டுபிடித்துள்ளார்கள்.
நாய் நன்றியுள்ள விலங்கு. வாலை ஆட்டுதலை வைத்துதான் நம்மவர்கள், நாய் நன்றியுள்ள விலங்கு என்று சொல்லி வைத்தார்களோ என்னவோ...? ஆனால், இதையும் வேலை மெனக்கிட்டு ஆராய்ச்சி செய்து, நாய் வலதுபக்கமாய் வாலை ஆட்டினால் நல்ல சந்தோஷ மூடில் இருக்கிறது என்று கண்டுபிடித்துள்ளார்கள் ஆராய்ச்சியாளர்கள். என்னது... இதையுமா போய் ஆராய்ச்சி பண்ணியிருக்காங்க...? என்றுதானே ஆச்சர்யமாய் கேட்கறீங்க. ஆமாம்... லண்டனின் விக்டோரியா பல்கலைக்கழகத்தின் ஆராய்ச்சியாளர்கள்தான் இந்த மேற்படி ஆராய்ச்சியை செய்திருக்கிறார்கள். இவர்கள் இந்த சோதனைக்கு 500 நாயை பயன்படுத்தியிருக்கிறார்கள். அந்த நாயுடனேயே இருக்குமாறு ஒரு ரோபோவையும் வைத்து ஆராய்ச்சி செய்ததில்தான் இந்தக் கண்டுபிடிப்பை கண்டுபிடித்துள்ளார்கள்.
ஐஸ் ஹோட்டல்

லவ் தினத்தில் ஐஸ் ஓட்டல்!
150 கட்டட கலைஞர்களை வைத்து அட்டகாசமாக ஒரு ஐஸ் ஓட்டலை கட்டி வருகிறார்கள் ரஷ்யர்கள். பிரமாண்டமாக உருவாகிவரும் இந்த ஐஸ் ஓட்டல் பிப்.14ம் தேதி திறக்கப்பட இருக்கிறது. இதுகுறித்து இந்த ஐஸ் ஓட்டலின் நிர்வாகத் தலைவர் கூறும்போது, ரஷ்யாவின் முதல் ஐஸ் ஓட்டல் எங்களுடையதுதான். பிரமாண்டமாக தயாராகி வரும் எங்கள் ஓட்டல் வேலை முடியும் தருவாயில் இருக்கிறது. தற்போது உள்புற அலங்கார வேலை நடந்து வருகிறது. இதில் உடற்பயிற்சி கூடம், 70 பேர் அமர்ந்து பார்க்கக் கூடிய திரையரங்கம், என்று பலதரப்பட்ட விசேஷ அம்சங்கள் இந்த ஓட்டலில் அமைத்துள்ளோம். காதலர் தினத்தை ஒட்டி இந்த ஓட்டல் திறக்கப்படும். மார்ச் 30ம் தேதி வரை இந்த ஓட்டல் இயங்கும். அதற்குப் பின் நகரத்தின் வெவ்வேறு பகுதிகளிலும் இந்த ஐஸ் ஓட்டலைக் கட்ட தீர்மானித்துள்ளோம் என்றார் அவர்.
ஜாலி பிட்ஸ்
உலகத்தில் இது இரண்டாவது!ஒரு ஆண், குழந்தை பெற்றுக்கொள்ளும் உலகத்திலேயே இரண்டாவது சம்பவம் இந்த பிப்ரவரி மாதம் நடக்கவிருக்கிறது. அப்படியென்றால் முதல் சம்பவம்தானே கேட்கறீங்க... அது 2008ம் ஆண்டு மார்ச் மாதம் தாமஸ்பீட்டி என்பவருக்கு முதல் குழந்தை பிறந்தது. இதுதான் உலகத்திலேயே முதல். அப்படீன்னா... இது இரண்டாவதுதானே!
அது எப்படிங்க ஒரு ஆம்பளையால குழந்தை பெத்துக்க முடியும்னுதானே கேட்கறீங்க... தாமஸ், மூர் இருவருமே பிறவியில் பெண்கள்தான். ஆனால், இவர்கள் சில ஆபரேஷன்கள் மூலம் ஆண்களாக மாறிவிட்டனர். ஆண்களாக மாறினாலும் மூர் தன்னுடைய கர்ப்பப் பையை மட்டும் நீக்கவில்லை. அப்படித்தான் மூர் தற்போது கற்பம். சென்ற மாதம் மருத்துவமனையில் சோதனை செய்துகொண்ட மூருக்கு பிப்ரவரி மாதம் குழந்தை பிறக்கும் என்று மருத்துவர்கள் கூறியிருக்கிறார்கள். எனக்கு குழந்தை பிறக்கறது பற்றி மற்றவர்கள் கேவலமாக பேசினாலும், எனக்கு அதைப் பற்றி கவலையில்லை என்று, தன்னுடைய கணவன் தாமஸ் தோழில் சாய்ந்து கொள்கிறார் மூர்.
கலி முத்திப் போச்சுடா சாமி!
Subscribe to:
Posts (Atom)