Saturday 16 June 2012

அமானுஷ்யங்கள் இருக்கிறதா?-3 :

வணக்கம் நண்பர்களே!

முன்பே அமானுஷ்யங்கள் இருக்கிறதா?? என்பதை பற்றி இரண்டு கட்டுரைகள் எழுதி இருந்தேன்! அது என் தோழி ஒருத்திக்கு நடந்தவற்றின் மூலம் எழுதினேன்! இது என் சித்தப்பா எனக்கு கூறியது!
எங்கள் ஊரில் ஒரு பெண் தனியாக கணவன் இல்லாமல் வாழ்ந்து வந்தாள்! என்ன காரணத்தினாலோ குழந்தையை தனியே விட்டு அவள் இறக்க நேர்ந்தது! தாயில்லாத அந்த குழந்தையை யாருமே வளர்க்க முன் வராததால் அந்த குழந்தை அந்த வீட்டிலேயே கவனிக்க பட்டு வந்தது!
இது போன்ற தருணத்தில் தான் பல வதந்திகள் பரவின!
இறந்து போன அன்னை குழந்தையை பிரிய மனமில்லாமல் இரவில் வந்து அதற்கு பாலூட்டுவதாக சொன்னார்கள்!
என் சித்தப்பா இளம் வயதினர் ஆகையால் அதில் எல்லாம் நம்பிக்கை இல்லாமல் இருந்தார்! ஒரு நாள் ஷிபிட் முடிந்து இரவில் தாமதமாக வீட்டிற்கு வந்தவர் அந்த வீட்டை தாண்டி வருமாறு நேர்ந்தது!
எதிர்பாராமல் தன் பின்னே ஏதோ சத்தம் கேட்க திரும்பி பார்த்தவருக்கு பெருத்த அதிர்ச்சி!
இறந்ததாக கூறிய அந்த பெண்மணியின் உருவம் காற்றில் மிதந்து சென்று அந்த வீட்டை அடைந்ததை கவனித்தார்! இருந்தும் இது ஏதோ பிரம்மை தான் என்று பயபடாமல் அந்த வீட்டை எட்டி பார்த்தவருக்கு மேலும் அதிர்ச்சி அந்த தாயின் உருவம் தன் குழந்தைக்கு பாலூட்டுவதையும் அதன் கண்களிலிருந்து ஏதோ திரவம் போல் கண்ணீர் வடிவதையும் கண்டிருக்கிறார்!
பார்த்தவருக்கு அதிர்ச்சி ஒரு புறம் இருக்க மனம் கண்ட காட்சியில் பாரமாய் உணர்ந்திருக்கிறது! தாயை பிரிந்த அந்த குழந்தையின் நிலையையும் மனமில்லாமல் குழந்தையை பிரிந்த அந்த தாயின் ஆத்மாவையும் நினைத்து கலங்கியிருக்கிறார்!
இது போல் பாசத்தால் கட்டுண்டு ஆத்மாக்கள் உண்மையிலேயே உலவுவது உண்டா?? கண்களினால் பாக்காத வரை நமக்கு நம்பிக்கை வருவது அரிதே!

No comments:

Post a Comment