அமானுஷயங்கள் பற்றி எனக்கு சந்தேகங்கள் ஏற்படுத்துகிற நிகழ்வுகள் என் வாழ்வில் பல நிகழ்ந்துள்ளன! 
அதில் அடுத்த சம்பவம் பற்றி தான் இதில் குறிப்பிட்டுள்ளேன்!
என் நெருங்கிய தோழி ஒருத்தியின் தாய் அவள் எட்டாவது படிக்கும் போதே இறந்து விட்டார்கள்! பெரிதாய் ஒன்றும் நோய்வாய் படாதவர்கள் ஏன் திடீர் என்று இறந்தார்கள் என்று அனைவருக்குமே ஆச்சர்யம்!
டாக்டர்கள் தைராய்டு பிரச்சனையால் இறந்ததாய் கூறினாலும் அதை அவ்வளவாய் நம்ப முடியாமல் போகவே அவர்களது கணவர் ஒரு கோவிலை நாடினார்!
அங்கு இருந்த சாமி ஒருவர் இது பில்லி சூனியத்தால் வந்த இறப்பு எனவே என் தோழியின் தந்தை அதிர்ந்தார்!
யார் இதை செய்தார்கள் என்று கேட்க அதற்கு அவர் அங்கிருக்கும் அறையில் சென்று உங்களுக்கு யார் மீது எல்லாம் சந்தேகமோ அவர்கள் பெயரை ஒரு காகிதத்தில் எழுதி கொண்டுவரவும் என்று கூறினார்!
அதன் படியே செய்தார் தந்தை! பிறகு அந்த சுவாமி அந்த காகிதத்தை எரித்து விடும்படி கூறினார்! எரித்த காகித சாம்பலை ஒரு சொம்பு நீரில் போட சொல்லவே அவரும் அதன்வாறே செய்தார்!
அந்த நீரில் இருந்து ஒரு துண்டு காகிதம் மட்டும் வந்ததாகவும் அதில் அப்படி செய்தவர்கள் பெயர் தெரிந்ததாம்!
அது யார் என்று கேட்டவர்க்கு கிடைத்த பதிலில் சர்வமும் ஒடுங்கி போனார்!
இயற்கையிலேயே என் தோழியின் தாயார் கடவுள் பக்தி நிறைந்தவர்கள்! அவர்கள் கோவிலுக்கு செல்லும் போது ஒரு குடும்பத்துடன் பழக்கம் ஏற்பட்டதாம்! நல்ல நண்பர்களாய் தான் இருந்தார்கள்!
அந்த குடும்பம் ஏழ்மையில் முன்னேற முடியாமல் தவித்த போது ஏதோ வசியம் செய்யும் ஆட்களிடம் சென்று ஏன் எங்கள் நிலை இவ்வளவு கீழ் மட்டத்திலேயே இருக்கிறது?? நாங்கள் முன்னேறும் மார்கம் கூறுங்கள் என்று கேட்க அதற்கு அந்த ஆட்கள் கூறியது நல்ல குடும்பத்தில் பிறந்து நன்றாக வாழும் ஒரு பெண்ணின் வாழ்வை நீங்கள் கெடுத்து அவளை பலி கொடுக்க வேண்டும் அப்படி செய்தால் தான் நீங்கள் வாழ்வில் முன்னேற முடியும் என்று சொல்ல அதன் படியே என் தோழியின் தாயாரை வசியம் செய்து அவர்களை அடிக்கடி வீட்டுக்கு அழைத்து சென்று குடிக்கும் பானத்தில் எதையோ கலக்கி கொடுத்து இப்படி செய்து விட்டதாக தகவல் கொடுத்திருகிறார் அந்த சுவாமி!
மக்களில் இப்படியும் எப்படி இருக்கிறார்கள்?? அவர்கள் முன்னேற்றத்திற்க்காக ஒரு அப்பாவி பெண்ணின் உயிரை பலிகொடுப்பது சரியா??
இந்த தவறுக்கெல்லாம் ஏது தண்டனை?? 
கொலைகார கூட்டம் இன்று சகல வசதிகளுடன் நன்றாக இருக்கிறது!! ஆனால் இங்கு ஒரு குடும்பத்தில் குழந்தைகள் தாயின்றி தவிக்கிறது!!
என் மனதை மிகவும் பாதித்த உண்மை சம்பவம்!