Saturday 9 June 2012

பேனா செய்த உதவி!


நாமக்கல்அருகே உள்ள நல்லிப்பாளையம் என்றகிராமத்தைச் சேர்ந்த விக்னேஷ் என்றமாணவர் ஸ்ரீநிவாசனைத் தொடர்பு கொண்டு தனதுபிரச்சினையத் தெரிவித்துள்ளார். விக்னேஷ் ஒரு தொழிற்கல்வி படிப்பில்இரண்டாண்டுகளை முடித்துவிட்டு மூன்றாமாண்டில் அடியெடுத்து வைக்கும் மாணவர், நல்லிப்பாளையம் UCO  வங்கியில் கல்விக்கடன் பெற்று  படித்து வருகிறார்அவர்  வட்டிக்குஅரசு அளிக்கும் மானியம் பெறத் தகுதியானவர். ஆனால் கடந்த இரண்டாண்டுகளுக்கான வட்டியைக்கட்டினால்தான் மூன்றாமாண்டுக்கான கடன் தொகையைத் தரமுடியும்என வங்கி மேலாளார்  கண்டிப்பாகச்சொல்லி விட்டார். கல்லூரி திறக்கிற நேரமானதால்அவரது பெற்றொருக்கு என்ன செய்வது என்றுதெரியவில்லை.கந்து வட்டிக்காரர்களிடம் 36 சதவீத வட்டிக்குக்கடன் வாங்கி வங்கியில் பணம்கட்டிவிட்டனர்.


கல்விக் கடன் பெறும் மாணவர்கள்படிக்கும் காலத்தில் வட்டியைச் செலுத்த வேண்டியதில்லை. தொழிற்கல்விபயிலும் மாணவர்களுக்கு வட்டிக்கான மானியமும் உண்டு. இந்தத் தகவல்களைச்சென்ற வாரப் புதிய தலைமுறையில்  வெளியிட்டிருந்தோம்
கல்விக் கடன் பெறுவது எப்படிஎன்பது பற்றிய தகவல்களைத் திரட்டிகிருஷ்ணா எழுதியிருந்தார். அதில் Education Loan Task force (ELTF) என்ற அமைப்பைச் சேர்ந்த ஸ்ரீநிவாசனின் பேட்டியையும்வெளியிட்டிருந்தோம்

புதிய தலைமுறையைப் படித்த விக்னேஷ்  ஸ்ரீநிவாசனைஜூன் 7ம் தேதி இரவு  தொடர்பு கொண்டு தனது பிரச்சினையத்தெரிவித்துள்ளார். ஸ்ரீநிவாசன் மறுநாள் வங்கி மேலாளரைபோனில் தொடர்பு கொண்டு விதிகளைச்சுட்டிக் காட்டியுள்ளார். ஆனால் வங்கி மேலாளார்ஆணவமாகப் பதில் சொன்னதாக ஸ்ரீநிவாசன்தெரிவிக்கிறார். “நீ யார் கிட்டவேணா போய்ச் சொல்லிக்கோ, வட்டிகட்டினால்தான் பணம் கொடுக்க முடியும்அது எங்கள் பாங்க் விதிகள்அப்படித்தான் சொல்கின்றனஎன்று சொல்லிவிட்டார்.

உடனே ஸ்ரீநிவாசன் மேலதிகாரிகளை மின்னஞ்சல் மூலம் தொடர்பு கொண்டுநடந்ததைத் தெரிவித்திருக்கிறார். அவரது மின்னஞ்சலில் புதியதலைமுறைக் கட்டுரையையும் குறிப்பிட்டுள்ளார். அன்று மாலை (ஜூன்8)  வங்கியின்  துணைப் பொது மேலாளர்திரு வெங்கடாச்சலம் ஸ்ரீநிவாசனுடன் தொடர்பு கொண்டு விவரங்கள்கேட்கிறார். சிறிது நேரத்தில்  வங்கிக்கிளை மேலாளரே விக்னேஷைத் தொடர்புகொண்டு  அடுத்த செமிஸ்டருக்கான கல்விக்கட்டணத்திற்குரிய  வரைவோலையை வாங்கிக் கொள் என்று சொல்லியிருக்கிறார். 9ம் தேதி விக்னேஷ் வங்கிக்குச்சென்று வரைவோலையைப் பெற்றுக் கொண்டுவிட்டார்.
இது போல் இன்னும் எத்தனைமாணவர்களுக்கு நடந்திருக்குமோ என்ற தன் கவலையைஸ்ரீநிவாசன் வங்கி நிர்வாகத்திடம் தெரிவிக்கிறார். ஜூன் 9ம் தேதி மாலைகோவை மண்டல மேலாளர் பாஷாதான் திங்கள் கிழமை  (ஜூன்11ம் தேதி) வங்கிக் கிளைக்கேசென்று விசாரணை நடத்த இருப்பதாகஸ்ரீநிவாசனைத் தொடர்பு கொண்டு தெரிவித்திருக்கிறார்.

புதிய தலைமுறையால் ஒரு மாணவனுக்கு விடிந்திருக்கிறது. இன்னும் பலருக்கும் தீர்வு கிடைக்கலாம்.

No comments:

Post a Comment