Monday 18 June 2012

அமானுஷ்யம்-மனிதன்- டெலிபதி

பல விஞ்ஞான ஆய்வுகளையும் அறிவியலையும் உற்றுநோக்கும் போது அனைத்தும்  ஒன்றோடு ஒன்று இணைந்தவையே. அவதார் படத்தை ஒரு சிறு உதாரணமாக சொல்லலாம் .


நேரம் ,காலம் எனும் பாதையில் அனைவரும் ஒன்று .அதே  நேரம் இந்த எண்ணங்கள் சிந்தனைகள் எனும் வடிவங்களும் உண்டு . ஒவ்வொரு  மனிதர்களிடமும் தனிப்பட்ட ரீதியில் அமானுஷ்ய சக்தி இருக்கிறது என கேள்விப்பட்டிருப்போம் .


சிலரால் பேய்களுடன் , ஆவிகளுடன் உரையாட முடியும் என கேள்விப்பட்டிருப்போம் ,சிலர்  காணும் கனவுகள் அப்படியே மீண்டும் நடக்கும் . இவற்றை திரைப்படங்களிலும் நிஜ வாழ்க்கையிலும் சில வேளைகளில்  அவதானித்திருப்போம் .அவை பற்றி கொஞ்சம் பார்ப்போம் .






சிலருக்கு எதிர்காலத்தில் நடக்கவிருப்பதை கணிக்க முடியும் . சிலர் ஏதாவது விழாக்கள் பற்றி செய்தி  எதிர்பார்க்கும் போது அந்த செய்தி அழைப்பாக வரும் .காணும் கனவுகள் அனைத்தும் அப்படியே எதிர்காலத்தில் நடக்கும் .


இது Extra sensory perception எனப்படுகிறது . இது கேட்டல் ,சுவைத்தல் , பார்த்தல் ,உணர்தல்  போன்ற புலன்களுக்கு அப்பாற்ப்பட்டது. இது உடலோடு சம்மந்தப்பட்டது அல்லாது சிந்தனை ,எண்ணங்களோடு சம்மந்தப்பட்டது . 


இதில் பல வகைகள் உண்டு 


1 . Telipathy  - டெலிபதி- வேறு ஒருவருடைய எண்ணங்களை ,மனதை படிக்கும் திறன்
2 . Clairvoyance - வேறு ஒரு இடத்தில் இடம்பெறும் விடயங்களை அவதானிக்க கூடிய தன்மை 
3 . Precognition - எதிர்காலத்தை அவதானிக்கும் திறன்  
4 . Retrocognition - இறந்தகாலத்தை அவதானிக்கும் திறன்
5 . Mediumship -இறந்த உயிர்களினூடான உரையாடல்...
6 . Psychometry -  ஒரு பொருளை தொடுவதன் மூலம் ஒரு நபர் பற்றி , ஒரு இடம் பற்றி அறிந்துகொள்ளல் .


போன்ற பல வகைகள் உண்டு .]


இது ஒரு உதாரணம் ..






இவரால் அந்த  நெற்றியின்  மீது இருக்கும் வடிவம் எது என உணரமுடியும்.


இதில் விஞ்ஞான ரீதியாகவும் ,மனோதத்துவ ரீதியாகவும் தர்க்கங்கள் தொடர்கின்றன .


இதில் டெலிபதி அனைவரும் கேள்விப்பட்டிருப்போம் . இது ஒருவகை எண்ண அலைவரிசைகள் பரிமாற்றம்  போலவே. மின்காந்த அலைகள் போல ஒருவகை அலைகள் இரு எண்ணகளிடையே உரையாடுவதே இது என  ஒரு கருத்து வைக்கப்பட்டிருந்தது .


ஒருவகை சக்தி பரிமாற்றம் இரு முனைகளுக்கிடையே இடம்பெறுகிறது என கூறப்பட்டிருந்தது .


உண்மையில் இவை என்ன என்பதை இரு புறமும் ஆராய்ந்து பார்ப்போம் ..

No comments:

Post a Comment